ஜஸ்வந்த் சிங்குக்கு பார்மர் சீட் இல்லை- தர மறுத்தது பாஜக!
டெல்லி: பாஜக மூத்த தலைவர் ஜஸ்வந்த்சிங்குக்கு ராஜஸ்தானின் பார்மர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு தர அக்கட்சி மேலிடம் மறுத்துவிட்டது. இதனால் ஜஸ்வந்த்சிங் அறிவித்தபடி சுயேட்சையாக போட்டியிடக் கூடும் எனத் தெரிகிறது.

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான ஜஸ்வந்த்சிங் தற்போது மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் தொகுதி சிட்டிங் எம்.பி.யாக இருக்கிறார். அவர் தாம் போட்டியிடும் கடைசி தேர்தல் என்பதால் சொந்த மாநிலமான ராஜஸ்தானின் பார்மர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்தார்.
ஆனால் ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தர ராஜே சிந்தியாவோ, கேணல். சோனாராமை நிறுத்த முடிவு செய்துள்ளார். அவர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.
இதனால் தமக்கு பார்மர் தொகுதி கிடைக்காது போனால் சுயேட்சையாக போட்டியிடுவேன் என்று எச்சரித்திருந்தார் ஜஸ்வந்த்சிங். இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சி மேலிடம், பார்மர் தொகுதியை ஜஸ்வந்த்சிங்குக்கு கொடுக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.












Click it and Unblock the Notifications