டெல்லியின் அனைத்து லோக்சபா தொகுதிகளையும் வென்ற பாஜக, சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்த சோகம்!
டெல்லி: கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் டெல்லியில் உள்ள ஏழு மக்களவை தொகுதிகளையும் கைப்பற்றிய பாஜக, சட்டசபை தேர்தலில் படுதோல்வியை சந்தித்துள்ளது.
கடந்த ஆண்டு மக்களவைக்கு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது. தலைநகர் டெல்லியிலுள்ள 7 மக்களவை தொகுதிகளையும் அப்படியே சுருட்டியது.
டெல்லியை சுற்றியுள்ள கௌதம புத்தா நகர், காசியாபாத், பரிதாபாத், குர்காவோன் ஆகிய 4 மக்களவை தொகுதிகளையும் பாஜக வேட்பாளர்கள் இரண்டரை லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.

இந்த தேர்தல் முடிவுகள் கடந்த ஆண்டு மே மாதம்தான் வெளியாகியிருந்தன. இன்னும் ஓராண்டு கூட முடியாத நிலையில், டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜக மோசமான தோல்வியை தழுவியுள்ளது. 7 தொகுதிகளிலும் உள்ள எம்.பிக்கள் தங்களது வாக்குகளை தக்க வைத்திருந்தால் கூட பாஜகவால் வெற்றி பெற்றிருக்க முடியும் என்பதே நிதர்சனம்.
ஒரே ஆண்டில், பாஜகவின் ஆசையை தலைகீழாக்கிவிட்டது டெல்லி. அந்த வகையில் டெல்லி கணிக்க முடியாத ஒரு நகரமாக மாறியுள்ளது என்றுதான் கூற வேண்டும்.












Click it and Unblock the Notifications