பாஜக சீனியரை குண்டுகட்டாக தூக்கிய போலீஸ்.. நட்டாவுக்கு வந்த கடுங்கோபம்.. மம்தா மீது பாய்ச்சல்
மம்தா பானர்ஜி மீது ஜேபி நட்டா குற்றஞ்சாட்டி விமர்சித்துள்ளார்
கொல்கத்தா: பாஜக எதிர்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரியை போலீசார் வலுக்கட்டாயமாக வெளியேற்றியதற்கு அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கண்டனம் தெரிவித்துள்ளார்.. நிர்வாகத்தின் இந்த தவறான முறை ஜனநாயகத்திற்கு நல்லதல்ல என்றும் நட்டா கூறியுள்ளார்.
2010-ம் ஆண்டு முதல் தன் வசம் வைத்திருக்கிற கொல்கத்தா மாநகராட்சியை தொடர்ந்து 3-வது முறையாக வென்று 'ஹாட்ரிக்' சாதனை படைக்க திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தீவிரம் காட்டியது..
இந்த மாநகராட்சியை கைப்பற்றாவிட்டாலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி கூட்டணியை பின்னுக்குத்தள்ளி 2-ம் இடத்தையாவது கைப்பற்றி விட வேண்டும் என்று பாஜகவும் கங்கணம் கட்டிக் கொண்டு போட்டியில் குதித்தது.

கொல்கத்தா
கொல்கத்தாவில் மாநகராட்சிக்கான தேர்தலும் நடந்து முடிந்தது.. மொத்தமுள்ள 144 வார்டுகளிலும் 4,959 வாக்குச் சாவடிகளில் கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி கடுமையான பாதுகாப்புடன் வாக்குப்பதிவும் நடந்தது.. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் - பாஜக இடையே கடும் போட்டி நிலவியது.. இதனால் சில இடங்களில் தேர்தலின்போது வன்முறைகளும் வெடித்தது.

கலவரம்
குறிப்பாக, வடக்கு கொல்கத்தாவின் வார்டு 36ல் உள்ள டாக்கி ஆண்கள் பள்ளி வாக்குச் சாவடிக்கு வெளியே திடீரென வெடிகுண்டு வீசப்பட்டது.. இதில் வாக்காளர் ஒருவர் படுகாயமடைந்தார்... ஆங்காங்கே கொல்கத்தாவில் வன்முறை நடந்ததால், மீண்டும் கொல்கத்தா மாநகராட்சியில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று பாஜகவை சேர்ந்த சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி வலியுறுத்தினார்..

நட்டா
அத்துடன், மாநகராட்சி தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாகவும், நடந்து முடிந்த தேர்தலை ரத்து செய்யவும் வலியுறுத்தி மாநில தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டார்... அப்போது அங்கிருந்த போலீசார், சுவேந்து அதிகாரியை வலுக்கட்டாயமாக வெளியேற்றியதாக சொல்லப்படுகிறது.. இதற்குதான் பாஜகவின் தேசிய தலைவர் நட்டா கண்டனம் தெரிவித்துள்ளார்..

பாஜக தலைவர்
இதைபற்றி அவர் சொல்லும்போது, "மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்றிருந்தபோது, மம்தா பானர்ஜி போலீஸை வைத்து பாஜக சீனியர் தலைவரான சுவேந்து அதிகாரியை கையாண்ட விதம் ஏமாற்றமளிக்கிறது. கொல்கத்தா மாநகராட்சி தேர்தலில் பரவலான தேர்தல் முறைகேடுகள் பற்றிய அறிக்கைகள் மற்றும் இப்போது நிர்வாகத்தின் இந்த தவறான முறை ஜனநாயகத்திற்கு ஒருபோதும் நல்லதல்ல" என்று கண்டனம் தெரிவித்துள்ளார். இதையடுத்து மேற்கு வங்க அரசியலில் பரபரப்பு தொற்றி கொண்டுள்ளது.

பாஜக
முன்னதாக, இந்த தேர்தல் முடிந்ததுமே பாஜக தரப்பில் இன்னொரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.. பாஜக வேட்பாளர் ஒருவரது மனைவியை, அவரது 8 வயது மகள் முன்னிலையில் பலாத்காரம் செய்து கொலை செய்வோம் என்று திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு விஷமிகள் மிரட்டல் விடுத்துள்ளதாக மேற்கு வங்காள பாஜக சமூக ஊடக பொறுப்பாளர் மாளவியா புகார் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுக கூட்டணியில் தாமரையின் '32'.. 2021 புள்ளி விவரம் என்ன.. பாஜகவினர் அறிய வேண்டியவை -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
Election Exclusive: சிரிச்சுக்கிட்டே சமாளித்த எடப்பாடி..டஃப் தொகுதிகளை தள்ளி விட்டுட்டாரே! கொங்கில் போட்ட மெகா ஸ்கெட்ச்! -
"தமிழகத்தில் பாஜக வளரவில்லை".. அதிமுக தான் எங்கள் பலம்.. மேடையிலேயே தோல்வியை ஒப்புக்கொண்ட அமித்ஷா! -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி?












Click it and Unblock the Notifications