காஷ்மீர் விவகாரத்தில் சமரசத்துக்கு இடமில்லாமல் செயல்படுக: பா.ஜ.கவுக்கு ஆர்.எஸ்.எஸ். அட்வைஸ்
டெல்லி: ஜம்மு காஷ்மீர விவகாரத்தில் எந்த ஒரு சமரசத்துக்கும் இடமில்லாமல் மத்திய பாரதிய ஜனதா அரசு செயல்பட வேண்டும் என்று அக்கட்சியின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கம் அறிவுறுத்தியுள்ளது.
மத்தியில் ஆளும் பாரதிய ஜனதாவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கம், 3 நாள் ஆலோசனைக் கூட்டத்தை டெல்லியில் கடந்த வாரம் நடத்தியது. பாரதிய ஜனதா அரசுக்கு வழிகாட்டும் வகையில் இக்கூட்டம் நடைபெற்றது.
முன்னாள் ராணுவத்தினரின் ஓய்வூதியம், காஷ்மீர் பிரச்சனை, வங்கதேச நாட்டவரின் சட்டவிரோத குடியேற்றம், சீனாவுடனான எல்லை பிரச்சனை என பல்வேறு பிரச்சனைகள் குறித்து இக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. எந்தெந்த பிரச்சனைகளுக்கு பா.ஜ.க. அரசு உடனடி முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற அறிவுறுத்தலையும் ஆர்.எஸ்.எஸ். கூறியது.
குறிப்பாக தேசப் பாதுகாப்பு, முன்னாள் ராணுவத்தினரின் ஓய்வூதிய விவகாரம் ஆகிய விவகாரங்கள் இந்த கூட்டத்தில் முதன்மையாக விவாதிக்கப்பட்டது.

காஷ்மீர் விவகாரம்
ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தாக்குதலால் பாதிக்கப்படும் பொதுமக்களுக்கு உடனடியாக நிவாரணப் பணிகளை செய்ய வேண்டும் என்பதையும் ஆர்.எஸ்.எஸ். வலியுறுத்தியது.
காஷ்மீர் பிரச்சனையில் எந்த ஒரு சமரசத்துக்கும் இடமில்லாமல் உறுதியாக செயல்பட வேண்டும் என்ற கருத்தையும் ஆர்.எஸ்.எஸ். முன்வைத்தது. அதே நேரத்தில் ஜம்மு காஷ்மீரத்தில் கூட்டணிக் கட்சியான மக்கள் ஜனநாயகக் கட்சியே காஷ்மீர் பிரச்சனை குறித்து அனைத்து முடிவுகளையும் எடுக்க விட்டுவிடக் கூடாது என்பதையும் அந்த இயக்கத்தின் தலைவர்கள் சுட்டிக் காட்டியிருக்கின்றனர்.

எல்லை விவகாரம்
அருணாசலப் பிரதேச எல்லை விவகாரத்தில் மத்திய அரசு மிகவும் உறுதியாக இருக்க வேண்டும். இதில் எந்த ஒரு பலவீனமான நிலைப்பாட்டையும் எடுத்துவிடக் கூடாது என்பதையும் அந்த இயக்கம் வலியுறுத்தியிருக்கிறது. அதேபோல் அருணாசல பிரதேச மக்களுடனான உறவை மத்திய அரசு நெருக்கமாக்கிக் கொள்வதற்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் ஆர்.எஸ்.எஸ். அறிவுறுத்தியிருந்தது.

ராணுவத்தினரின் ஓய்வூதியம்
முன்னாள் ராணுவத்தினருக்கான ஓய்வூதிய விவகாரத்தில் மத்திய அரசு முன்னரே தீர்வு கண்டிருக்க வேண்டும்; இந்த பிரச்சனை நீடித்ததால் மத்திய அரசு மீதான இமேஜ் பாதிக்கப்பட்டிருக்கிறது என்ற அதிருப்தியையும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் வெளிப்படுத்தினர்.

வங்கதேசத்தவர் குடியேற்றம்
மேலும் வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறுபவர்களைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை தேவை எனவும் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் பா.ஜ.க. தலைவர்களை வலியுறுத்தியுள்ளது.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications