தொகுதி பங்கீட்டில் மலைக்கும் மடுவுக்கும் வித்தியாசம்... ஆந்திராவில் பாஜக- தெலுங்குதேசம் கூட்டணி முறி
ஹைதராபாத்: தொகுதிப் பங்கீட்டில் சுமூகத் தீர்வு எட்டப்படாததையொட்டி ஆந்திராவில் பாரதீய ஜனதா மற்றும் தெலுங்குதேசம் இடையேயான கூட்டணி முறிந்துள்ளது.
லோக்சபா தேர்தல் அறிவிக்கப் பட்டதையடுத்து ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி வைக்க பாஜக முடிவு செய்தது. அதனைத் தொடர்ந்து அக்கட்சியின் மாநில விவகார பொறுப்பாளர் பிரகாஷ் ஐவதேகர் ஆந்திரா வந்து தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவுடன் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது ஆந்திராவில் பாஜகவுக்கு குறைந்த தொகுதிகளே ஒதுக்க முடியும் என சந்திரபாபு நாயுடு தெரிவித்ததாக தகவல்கள் வெளியானது. ஆனால், அதனை பாஜக ஏற்றுக் கொள்ளவில்லை.
கிட்டத்தட்ட 10 நாட்களாக நடந்த பேச்சுவார்த்தையில் தொகுதிப் பங்கீடு குறித்து தெளிவான உடன்பாடும் ஏற்பட வில்லை. இதனையடுத்து ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியுடன் பா.ஜனதா உறவு முறிந்ததாக அறிவிக்கப் பட்டுள்ளது. எனவே, ஆந்திராவில் பாஜக தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக தெலுங்கானா பகுதி பா.ஜனதா தலைவர் கிஷண் ரெட்டி கூறுகையில், ‘தெலுங்கு தேசம் கட்சியுடன் பா.ஜனதா கூட்டணி அமையவில்லை. அவர்கள் தொகுதி ஒதுக்குவது மலைக்கும் மடுவுக்கும் போன்ற வித்தியாசம் உள்ளது. தெலுங்கானா பகுதியில் பா.ஜனதா 119 சட்டசபை தொகுதியில் 17 நாடாளுமன்ற தொகுதியிலும் பா.ஜனதா தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. நாளை உகாதியன்று முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட உள்ளோம்.
தெலுங்கு தேசம் கட்சியால் ஆந்திராவில் எங்களுக்கு எந்த பலனும் இல்லை. தனித்து நின்றால் தெலுங்கு தேசம் கட்சி போணியாகாது' என இவ்வாறு அவர் கூறினார்.
சீமாந்திரா பகுதி பா.ஜனதா தலைவர் அரிபாபு கூறுகையில், ‘‘சீமாந்திரா பகுதியில் பா.ஜனதா இருபத்தைந்து லோக்சபா தொகுதியிலும், 175 சட்டமன்ற தொகுதியிலும் தனித்து போட்டியிடும் எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications