லட்சக்கணக்கில் திரண்டவர்கள் விவசாயிகள் இல்லையாம்.. தீவிரவாதிகளாம்... பாஜக கிண்டல்
மஹாராஷ்டிராவில் பேரணியில் ஈடுபட்டு இருக்கும் விவசாயிகள் எல்லோரும் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் என்று பாஜக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளார்கள்.
Recommended Video

மும்பை: மஹாராஷ்டிராவில் பேரணியில் ஈடுபட்டு இருக்கும் விவசாயிகள் எல்லோரும் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் என்று பாஜக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளார்கள்.
6 நாட்களுக்கு முன்பு நாசிக்கிலிருந்து தொடங்கிய விவசாயிகள் நடைபேரணி தற்போது மும்பை வரை வந்து இருக்கிறது. இப்போதே 50 ஆயிரம் பேர் வரை பேரணியில் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.
இன்று அவர்கள் அம்மாநில சட்டசபையை முற்றுகையிட போகிறார்கள். மேலும் அம்மாநில அரசு நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தையும் நடக்க இருக்கிறது.

வவிவசாயிகள்
இந்த பேரணியில் கலந்து கொண்டது விவசாயிகள் இல்லை என்று அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் குறிப்பிட்டு இருக்கிறார். இதில் இருக்கும் 95 சதவிகித பேருக்கு விவசாயம் என்றால் என்ன என்றே தெரியாது என்று மோசமான கருத்தை கூறியுள்ளார். அவர்கள் எல்லோரும் ஆதிவாசிகள் மட்டுமே என்றுள்ளார்.

மாவோயிஸ்டுகள்
அதேபோல் பாஜக கட்சியின் எம்.பி பூனம் மகாஜன் இன்னொரு மோசமான கருத்தை தெரிவித்து இருக்கிறார். இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளும் எல்லோரும் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் என்று குறிப்பிட்டு இருக்கிறார். கிராமத்தில் இருந்து வந்த மாவோயிஸ்டுகள் என்றுள்ளார்.

பதில்
இதற்கு கம்யூனிஸ்ட் கட்சி பதிலடி கொடுத்துள்ளது. முதலில் சென்று பத்திரிக்கைகள் படியுங்கள், மக்களுடன் பழகுங்கள், அப்போதுதான் யார் தீவிரவாதிகள், யார் விவசாயிகள் என்று தெரியும் என்று கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த எம்.பி.ராஜேஷ் தெரிவித்து இருக்கிறார். இன்னும் சிலர் பாஜகவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பேச்சுவார்த்தையில் பிரச்சனை
இவ்வளவு பிரச்சனைக்கு இடையில்தான் மாநில அரசு விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்து இருக்கிறது. இன்று மதியம் இந்த பேச்சு வார்த்தை நடக்க உள்ளது. 12 பேர் கொண்ட விவசாயிகள் குழு இதில் பங்கேற்கும் . 6 பேர் அடங்கிய அரசு குழு இதில் கலந்து கொள்ளும். ஆனால் பாஜகவின் இந்த கருத்தால் பேச்சுவார்த்தை நடப்பதில் பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications