For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லட்சக்கணக்கில் திரண்டவர்கள் விவசாயிகள் இல்லையாம்.. தீவிரவாதிகளாம்... பாஜக கிண்டல்

மஹாராஷ்டிராவில் பேரணியில் ஈடுபட்டு இருக்கும் விவசாயிகள் எல்லோரும் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் என்று பாஜக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளார்கள்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    விவசாயிகளை தீவிரவாதிகள் என கிண்டல் செய்த பாஜக-வீடியோ

    மும்பை: மஹாராஷ்டிராவில் பேரணியில் ஈடுபட்டு இருக்கும் விவசாயிகள் எல்லோரும் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் என்று பாஜக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளார்கள்.

    6 நாட்களுக்கு முன்பு நாசிக்கிலிருந்து தொடங்கிய விவசாயிகள் நடைபேரணி தற்போது மும்பை வரை வந்து இருக்கிறது. இப்போதே 50 ஆயிரம் பேர் வரை பேரணியில் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

    இன்று அவர்கள் அம்மாநில சட்டசபையை முற்றுகையிட போகிறார்கள். மேலும் அம்மாநில அரசு நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தையும் நடக்க இருக்கிறது.

    வவிவசாயிகள்

    வவிவசாயிகள்

    இந்த பேரணியில் கலந்து கொண்டது விவசாயிகள் இல்லை என்று அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் குறிப்பிட்டு இருக்கிறார். இதில் இருக்கும் 95 சதவிகித பேருக்கு விவசாயம் என்றால் என்ன என்றே தெரியாது என்று மோசமான கருத்தை கூறியுள்ளார். அவர்கள் எல்லோரும் ஆதிவாசிகள் மட்டுமே என்றுள்ளார்.

    மாவோயிஸ்டுகள்

    மாவோயிஸ்டுகள்

    அதேபோல் பாஜக கட்சியின் எம்.பி பூனம் மகாஜன் இன்னொரு மோசமான கருத்தை தெரிவித்து இருக்கிறார். இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளும் எல்லோரும் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் என்று குறிப்பிட்டு இருக்கிறார். கிராமத்தில் இருந்து வந்த மாவோயிஸ்டுகள் என்றுள்ளார்.

    பதில்

    பதில்

    இதற்கு கம்யூனிஸ்ட் கட்சி பதிலடி கொடுத்துள்ளது. முதலில் சென்று பத்திரிக்கைகள் படியுங்கள், மக்களுடன் பழகுங்கள், அப்போதுதான் யார் தீவிரவாதிகள், யார் விவசாயிகள் என்று தெரியும் என்று கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த எம்.பி.ராஜேஷ் தெரிவித்து இருக்கிறார். இன்னும் சிலர் பாஜகவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    பேச்சுவார்த்தையில் பிரச்சனை

    பேச்சுவார்த்தையில் பிரச்சனை

    இவ்வளவு பிரச்சனைக்கு இடையில்தான் மாநில அரசு விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்து இருக்கிறது. இன்று மதியம் இந்த பேச்சு வார்த்தை நடக்க உள்ளது. 12 பேர் கொண்ட விவசாயிகள் குழு இதில் பங்கேற்கும் . 6 பேர் அடங்கிய அரசு குழு இதில் கலந்து கொள்ளும். ஆனால் பாஜகவின் இந்த கருத்தால் பேச்சுவார்த்தை நடப்பதில் பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது.

    English summary
    BJP says that people protesting in Mumbai are not really farmers but terrorist. There are 6 reasons behind the Farmers protest in Mumbai. The Protest led by more than 35,000 farmers of All Indian Kisan Sabha (AIKS), demanding a complete waiver of loans, arrived in Mumbai on Sunday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X