ராஜ்யசபா சீட் கொடுத்து மெகா ஸ்டார் சிரஞ்சீவியை வளைக்க ஸ்கெட்ச்- ஆந்திராவில் பாஜகவின் செம்ம வியூகம்!
அமராவதி: ஆந்திரா சட்டசபை தேர்தல், லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில் அம்மாநிலத்தில் வலுவாக காலுன்றுவதற்கு தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியை மீண்டும் அரசியல் களத்துக்கு கொண்டு வருவதற்கு பாஜக படுதீவிரமாக முயற்சிக்கிறதாம். சிரஞ்சீவிக்கு ராஜ்யசபா சீட் கொடுத்து பாஜகவில் குடும்பத்துடன் இணைய வைக்க பேச்சுவார்த்தைகள் ஜரூராக நடந்து வருகிறதாம்.
தென்னிந்தியாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆந்திராவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி. தென்னிந்திய திரை உலகில் கொடி கட்டிப் பறக்கும் சிரஞ்சீவி 2008-ம் ஆண்டு பிரஜா ராஜ்ஜியம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கி தேசிய கட்சிகளை தெறிக்கவிட்டார். 2009-ம் ஆண்டு ஆந்திரா சட்டசபை தேர்தலில் மொத்தம் 294 இடங்களில் 18 இடங்களை பிரஜா ராஜ்ஜியம் கைப்பற்றியது. 16% வாக்குகளை சிரஞ்சீவி கட்சி பெற்றது. ஆனால் சிரஞ்சீவியால் தொடர்ந்து கட்சியை நடத்த முடியாமல் 2011-ல் காங்கிரஸில் கட்சியுடனேயே ஐக்கியமானார். மத்திய அமைச்சராகவும் சிரஞ்சீவி பதவி வகித்தார். பின்னர் ஒட்டுமொத்தமாக தீவிர அரசியலில் இருந்தே சிரஞ்சீவி ஒதுங்கிவிட்டார்.

சிரஞ்சீவியின் சகோதரர் நாகேந்திர பாபு, திரைப்பட தயாரிப்பாளர். மற்றொரு சகோதரர் பவன் கல்யாண், ஜனசேனா கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றிருக்கிறது. ஆந்திராவில் தெலுங்குதேசம் கட்சியுடனும் பவன் கல்யாண் கட்சி கூட்டணி அமைத்துள்ளது. சிரஞ்சீவி குடும்பத்தில் அல்லு அர்ஜூன், அல்லு சிரிஷ், வருண் தேஜ், நடிகை நிகாரிகா, சாய் தரம் தேஜ், வைஷ்ணவ் தேஜ் என ஏகப்பட்ட திரை பிரபலங்கள் உள்ளனர்.
இதனால் தற்போது பாஜகவின் கவனம் சிரஞ்சீவி பக்கம் திரும்பி இருக்கிறது. ஆந்திராவில் பாஜக என்ற கட்சியே இல்லை. 2019 தேர்தலில் நோட்டாவுக்கு கீழேதான் வாக்குகளே கிடைத்தன. ஆந்திராவில் பாஜக காலூன்ற வேண்டும் எனில் சிரஞ்சீவி போன்ற மெகா ஸ்டார் ஆதரவு தேவை என்பதால் இப்போது காய்களை நகர்த்தி வருகிறதாம். உத்தரப்பிரதேசத்தில் 10 இடங்களுக்கான ராஜ்யசபா தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஒன்றை சிரஞ்சீவிக்கு கொடுக்க பாஜக பேரம் பேசுகிறதாம். ராஜ்யசபா சீட் கொடுத்து சிரஞ்சீவியை பாஜகவுக்குள் கொண்டு வந்துவிட்டால் ஆந்திராவின் பெரும்பான்மை ஜாதிகளில் ஒன்றான காப்பு வாக்குகள் கிடைக்கும்; பாஜகவும் காலூன்றி விடும் என்பதுதான் டெல்லி மேலிடத்தின் கணக்காம். சிரஞ்சீவி மீண்டும் அரசியலில் கால் பதிப்பாரா? என்பது வரும் நாட்களில் தெரிந்துவிடும்.
-
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
30+ தொகுதியில் போட்டி? தமிழகத்தில் பாஜக எந்தெந்த தொகுதிகளில் களமிறங்குகிறது.. வெளியான முக்கிய தகவல் -
பாஜக பஞ்சாயத்து ஓவர்..டேக் ஆஃப் ஆகுமா அதிமுக கூட்டணி! ப்ளானை மாற்றிய ’டெல்லி’ தலை! திடீர் ட்விஸ்ட்! -
ஆதரவாளர்களுடன் சரத்குமார் ரகசிய ஆலோசனை.. மீண்டும் உதயமாகிறதா சமக.. அதிர்ச்சியில் பாஜக -
புதுச்சேரியில் 9 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு.. ஜான் குமாருக்கு மீண்டும் சீட்! -
மம்தாவுக்கு குடைச்சலை கொடுக்கும் பாஜக.. மேற்கு வங்கத்தில் மலரும் தாமரை? 7 முக்கிய பாயிண்டுகள்











Click it and Unblock the Notifications