டெல்லி- லக்னோ சதாப்தி ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. பீதியில் மூழ்கிய டெல்லி ரயில் நிலையம்
டெல்லி: இன்று அதிகாலை டெல்லி ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து பல ரயில்கள் தாமதமாக கிளம்பிச் சென்றன, சில ரயில்கள் வேறு ரயில் நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன. மேலும் டெல்லி-லக்னோ இடையேயான சதாப்தி எக்ஸ்பிரஸ் காசியாபாத்தில் நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டது.
டெல்லியில் இருந்து லக்னோ செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டு வெடிக்கும் என்று டெல்லி போலீசாருக்கு இமெயில் மூலம் மிரட்டல் கடிதம் வந்துள்ளது. இதையடுத்து போலீசார் இது குறித்து டெல்லி ரயில் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இந்நிலையில் இது குறித்து மூத்த ரயில்வே அதிகாரி நீரஜ் குமார் கூறுகையில்,
சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக டெல்லி போலீசார் இன்று காலை 6.23 மணிக்கு எங்களுக்கு தகவல் அளித்தனர். ஆனால் அந்த ரயில் காலை 6.10 மணிக்கே கிளம்பிச் சென்றுவிட்டது. இதையடுத்து ரயிலை காசியாபாத் ரயில் நிலையத்தில் நிறுத்தி பயணிகளை கீழே இறக்கிவிட்டு சோதனை நடத்தப்பட்டது.

சோதனையில் மோப்ப நாய்களும் ஈடுபடுத்தப்பட்டன. சோதனையில் ரயிலில் வெடிகுண்டு இல்லை என்பது தெரிந்த பிறகு 7.40 மணிக்கு ரயில் கிளம்பிச் சென்றது என்றார்.
டெல்லி ரயில் நிலையத்திலும் சோதனைக்காக நிறுத்தி வைக்கப்பட்ட ரயில்களில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பிறகு கிளம்பிச் சென்றன.

பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் உள்ள விமானப்படை தளத்தில் தீவிரவாதிகள் சனிக்கிழமை தாக்குதல் நடத்தியதை அடுத்து டெல்லி மற்றும் பிற அண்டை மாநிலங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications