பயங்கரவாதி பெயரில் மசூதிக்கு வெடிகுண்டு மிரட்டல்! இரவில் பரபரத்த பெங்களூர்! கடைசியில் ட்விஸ்ட்
பெங்களூர்: பெங்களூரில் சிவாஜி நகரில் முஸ்லிம் மக்கள் அதிகம் வசித்து வரும் நிலையில் அங்குள்ள மசூதிக்கு பயங்கரவாதிகள் குண்டு வைத்துள்ளதாக இரவில் மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெங்களூர் நகரில் முக்கிய இடங்களில் ஒன்று சிவாஜி நகர். முஸ்லிம் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஒன்றாக சிவாஜி நகர் இருக்கிறது. இங்கு வசிப்பவர்களில் பெரும்பாலும் தமிழ் பேச தெரிந்தவர்கள்.
இந்நிலையில் தான் நேற்று இரவு 10 மணிக்கு பெங்களூர் மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் ஒன்று வந்தது. போனில் பேசிய நபர் கூறிய தகவல் போலீசாரை அதிர்ச்சியடைய செய்தது.

அதாவது, ‛‛பெங்களூர் சிவாஜிநகரில் ஆஜாம் மசூதியில் பயங்கரவாதிகள் குண்டுகள் வைத்துள்ளனர். இது சிறிது நேரத்தில் வெடிக்க உள்ளது. இதனை தடுத்து நிறுத்துவது உங்களின் கைகளில் தான் உள்ளது'' எனக்கூறிவிட்டு உடனடியாக போன் இணைப்பை துண்டித்துள்ளார். இதனால் ஷாக்கான கட்டுப்பாட்டு அறை ஊழியர் அதிர்ச்சியடைந்தனர்.
அதோடு உடனடியாக சிவாஜி நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் வேகமாக மசூதிக்கு சென்றனர். இதையடுத்து அங்கிருந்தவர்களிடம் நடத்த விஷயத்தை கூறிவிட்டு மசூதிக்குள் நுழைந்து அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.
மசூதியில் ஒரு இடம் கூட விடாமல் அனைத்து பகுதிகளிலும் போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது மசூதியில் வெடிகுண்டு எதுவும் இல்லாததும், அது வெறும் புரளி என்பதும் தெரியவந்தது. இதனால் போலீசார் மற்றும் மசூதி நிர்வாகிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
மேலும் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த நபர் மசூதிக்கு பயங்கரவாதிகள் குண்டு வைத்திருப்பதாக பொய்யான தகவலை கூறிவிட்டு இணைப்பை துண்டித்ததும் தெரியவந்தது. இதையடுத்து கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த நபரின் எண்ணை வைத்து அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் மசூதியில் வெடிகுண்டு இருப்பதாக கூறிய நபர் பெங்களூரில் இருந்து பேசவில்லை என்பதும், அவர் பெங்களூருவுக்கு வெளியே இருந்து தொடர்பு கொண்டு இருப்பதும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் நேற்று இரவு சிவாஜி நகரில் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications