எல்லையில் ஊடுருவல்: இந்தியா-சீனா செய்தியாளர்கள் பேச்சுவார்த்தை ரத்து
டெல்லி: எல்லையில் தொடர்ந்தும் சீனா ராணுவ வீரர்கள் ஊடுருவி வருவதால் டெல்லியில் வரும் 24-ம் தேதி நடைபெறவிருந்த இந்திய-சீன செய்தியாளர்கள் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது.
சீன அதிபர் ஜி ஜின்பிங் சமீபத்தில் மூன்று நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்திருந்தார். அப்போது இருதரப்புக்கும் இடையே ரயில்வே உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பாக ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

தொடர் ஊடுருவல்
எல்லைப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று சீன அதிபர் தெரிவித்திருந்தார். அதே சமயம் இந்திய எல்லையில் உள்ள சுமர் பகுதியில் சீன ராணுவம் ஊடுருவியது. அங்கு சாலை அமைப்பதற்கான முயற்சியில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மீண்டும் ஊடுருவல்
இந்திய ராணுவத்தின் எதிர்ப்பை அடுத்து அங்கிருந்து சீன ராணுவ வீரர்கள் வெளியேறினர். ஆனால், மீண்டும் கடந்த சனிக்கிழமை சுமர் பகுதியில் சீன ராணுவம் ஊடுருவியுள்ளது. அவர்களை வெளியேறுமாறு இந்திய ராணுவம் வலியுறுத்தி வருகிறது.

பேச்சுவார்த்தை
எல்லையில் சாலை அமைக்கும் பணிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் ராணுவ வீரர்களை சீன அரசு நிறுத்திவைத்துள்ளது. இந்நிலையில், வரும் 24-ந் தேதி டெல்லியில் இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்த செய்தியாளர்கள் சந்தித்துப் பேசுவதற்கான கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ரத்து
இதில் பங்கேற்க வரும் சீனாவின் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி செய்தி சேனல்களின் ஆசிரியர்களுக்கு இந்திய அரசு ஏற்கெனவே அனுமதி அளித்திருந்தது. ஆனால், திடீரென அந்த அனுமதியை இந்திய அரசு நேற்று ரத்து செய்துள்ளது.

ஏன் ரத்து?
சீன ராணுவத்தின் ஊடுருவல் நடைபெற்றுள்ள நிலையில் அந்நாட்டைச் சேர்ந்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது சரியாக இருக்காது என்பதால் இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications