சீனப் பொருட்களை புறக்கணியுங்கள் சிலிகுரி மக்கள் வேண்டுகோள் !
சிலிகுரி: இந்திய எல்லை பகுதிக்குள் சீனா அத்துமீறி வருவதை கண்டித்து அந்நாட்டு பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என சிலிகுரி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியா, பூடான், சீனா ஆக்கிரமித்துள்ள திபெத் சந்திக்கும் முச்சந்திப்பில் உள்ளது பூடானின் டோக்லா பீடபூமி. இந்தப் பகுதியில் சீனா சாலைப்பணிகளை தொடங்கியது. அதை இந்தியாவும், பூடானும் கடுமையாக எதிர்த்தன. மேலும், சிக்கிம் எல்லையில் இந்தியா ராணுவ வீரர்களைக் குவித்துள்ளது. பதிலுக்கு சீனாவும் ராணுவத்தைக் குவித்துள்ளது.

இதனால் இரு நாடுகளுக்கு இடையே மோதல் சூழல் உருவாகியுள்ளது. எந்த நேரத்திலும் போர் வெடிக்கலாம் என பெரும் பீதி நிலவி வருகிறது. டோக்லாவை ஒட்டியுள்ள எல்லையில் நீண்ட தூரத்திற்கு இரு நாட்டு படைகளும் குவிக்கப்பட்டுள்ளன. இந்த விவகாரம் முடிவுக்கு வரும் வரை தற்போதுள்ள நிலைப்பாட்டையே தொடர இந்தியா முடிவு செய்துள்ளதாக ராணுவ அதிகாரிகள் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே சீனாவின் அத்துமீறலை கண்டிக்கும் வகையில் சீனாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை புறக்கணியுங்கள் என்ற பிரசாரம் இந்தியாவில், சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது.
இந்நிலையில் சீனாவின் அத்துமீறலை கண்டித்து மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் சீனப் பொருட்களை புறக்கணிக்க கோரி பேரணி நடைபெற்றது. பேரணியில் கலந்துகொண்டவர்கள் சீனப் பொருட்களை எரித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். மேலும் சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன் மூலம் சீனாவின் பொருளாதார வளர்ச்சி பின்னடைவை சந்திக்க நாம் காரணமாகும் நிலை உருவாகும் என்றும் அவர்கள் கூறினர்.
-
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications