சுதந்திர போராட்டத்தை காட்டிக் கொடுத்த பிரிட்டிஷ் உளவாளிகள்... அசோக் கெலாட் கடும் தாக்கு
ஜெய்ப்பூர்: சுதந்திரப் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்த பிரிட்டிஷ் உளவாளிகள்தான், விடுதலைக்குப் போராடி சிறை சென்ற காங்கிரஸ் பாரம்பரியம் குறித்து விமர்சிக்கின்றனர் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் சாடியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் 135-வது ஆண்டு தொடக்க விழா ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இதில் முதல்வர் அசோக் கெலாட் பேசியதாவது:
நமது தேசத்தின் அரசியல் சாசனம் பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாகி உள்ளது. ஜனநாயக குரல்களை ஒடுக்குவதில் மத்திய அரசு தீவிரம் காட்டுகிறது.

மோடி விமர்சனம்
காங்கிரஸ் பேரியக்கத்தின் பாரம்பரியம் என்பது பெருமைக்குரியது. ஒட்டுமொத்த தேசமும் காங்கிரஸின் பாரம்பரியத்தையும் தியாகத்தையும் போற்றுகிறது. ஆனல் நமது பிரதமர், காங்கிரஸின் பாரம்பரியத்தையும் பண்டித ஜவஹர்லால் நேருவின் பாரம்பரியத்தையும் விமர்சிக்கின்றார்..

உயிரை தியாகம் செய்த நேரு பரம்பரை
தேசத்தின் விடுதலைக்காக சிறை சென்றவர்கள் நேருவின் பரம்பரையினர். முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தியும் ராஜீவ் காந்தியும் தேசதுக்காக உயிரையே நீத்தவர்கள். அதுதான் நேருவின் பாரம்பரியம்.

பிரிட்டிஷ் உளவாளிகள்
பிரதமர் மோடியின் சித்தாந்தத்தை பேசியவர்கள் சுதந்திரப் போராட்டத்தின் போது பிரிட்டிஷ் உளவாளிகளாக செயல்பட்டனர். அவர்கள்தான் இன்றைக்கு காங்கிரஸின் பாரம்பரியம் குறித்து பேசுகிறார்கள். இது அவமானகரமானது.

நாடு எங்கே போகிறது?
ஜனநாயகத்தின் அத்தனை அம்சங்களும் இன்று நிர்மூலமாக்கப்பட்டு வருகின்றன. நீதித்துறை, தேர்தல் ஆணையம், சிபிஐ, அமலாக்கப் பிரிவு, வருமான வரித்துறை அனைத்து துறைகளுக்கும் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. பிரதமர் மோடியின், பிரதமர் மோடி அலுவலகத்தின் ஒப்புதல் இல்லாமல் ஒரு நடவடிக்கையையும் இந்த துறைகள் மேற்கொள்ள முடியாது. அப்படியானால் இந்த தேசம் எங்கே போய் கொண்டிருக்கிறது?
இவ்வாறு அசோக் கெலாட் கூறினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications