Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாதுகாப்பு, காப்பீட்டுத் துறையில் அன்னிய முதலீடு 49% ஆக உயர்வு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாட்டின் பாதுகாப்பு மற்றும் காப்பீட்டுத் துறையில் அன்னிய முதலீட்டுக்கான வரம்பு 26%-ல் இருந்து 49% ஆக அதிகரிக்கப்படுவதாக நிதி அமைச்சர் அருண்ஜேட்லி அறிவித்துள்ளார்..

நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்த பட்ஜெட்டின் சில முக்கிய அம்சங்கள்:

மக்கள் வேலை வாய்ப்பு தேடி நகரங்களுக்கு இடம்பெயர்வதை தவிர்க்கும் வகையில் 100 நவீன நகரங்கள் அமைக்க ரூ.7060 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

பாதுகாப்பு மற்றும் காப்பீட்டுத் துறையில் அன்னிய நேரடி முதலீடானது 26%-ல் இருந்து 49% ஆக அதிகரிக்கப்படும்.

Budget 2014: FDI Limit in Defence, Insurance Hiked to 49%

பெருநகரங்களில் பெண்களின் பாதுகாப்புக்காக 150 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

தமிழகம் உட்பட 2 மாநிலங்களில் சூரிய மின் உற்பத்திக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

உரிமை கோரப்படாத வருங்கால வைப்பு நிதி (பி.எப்) பணத்தை ஆய்வு செய்ய தனிக்குழு அமைக்கப்படும்.

வங்கிகளுக்கு வரும் 2018ம் ஆண்டுக்குள் ரூ.2.4 லட்சம் கோடி நிதி உதவி அளிக்கப்படும்.

அடுத்த 6 மாதத்தில் 9 விமான நிலையங்கள் தரம் உயர்த்தப்படும்.

கிராமப்புற மக்களின் வீட்டு வசதிக்கு 8 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். கிராமப்புற குடிநீர் வசதியை மேம்படுத்த 3,600 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+