சபரிமலை-பெங்களூரு பேருந்து வசதி தொடக்கம்: ஐயப்ப பக்தர்களுக்காக...
சபரிமலை: புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன் தொடங்கியுள்ளது.இதற்காக பம்பையில் இருந்து பெங்களூருக்கு கேரள அரசு போக்குவரத்துக்கழகமும், சென்னைக்கு தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழகமும் பேருந்து வசதியை தொடங்கியுள்ளன.

மதுரை, பழனி, திருச்சி உள்ளிட்ட ஊர்களுக்கு விரைவில் சர்வீஸ் தொடங்க உள்ளது என அரசு போக்குவரத்துக்கழகங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மண்டல பூஜை சீசன் கடந்த 16 ஆம் தேதி தொடங்கிய நிலையில் ஐயப்ப பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கேரள அரசு போக்குவரத்துக்கழகமும், தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழகமும் ஒப்பந்தம் செய்து, பக்தர்கள் வசதிக்காக நூற்றுக்கும் அதிகமான பேருந்துக்களை இயக்குகின்றன. இதன் படி கேரள அரசு போக்குவரத்துக்கழகம் கர்நாடக மாநில ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக பெங்களூருக்குஇண்டர்ஸ்டேட் சர்வீஸ் தொடங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications