அமைச்சர்கள் குழுக்கள் கலைப்பு: இன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல்
டெல்லி: ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு உருவாக்கிய 30 அதிகாரம் பெற்ற அமைச்சர்கள் குழு ( EGoMs- Empowered Group of Ministers) மற்றும் அமைச்சர்கள் குழுக்களை (GoMs-Group of Ministers) கலைப்பதற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளிக்கும் என்று கூறப்படுகிறது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு உருவாக்கிய 30 அதிகாரம் பெற்ற அமைச்சர்கள் குழு மற்றும் அமைச்சர்கள் குழுக்கள் கலைக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி கடந்த மே மாதம் 31ம் தேதி அறவித்தார். இதையடுத்து மத்திய அமைச்சகங்களுக்கு கூடுதல் அதிகாரங்கள் அளிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
9 அதிகாரம் பெற்ற அமைச்சர்கள் குழு மற்றும் 21 அமைச்சர்கள் குழுக்கள் கலைக்கப்படுவதன் மூலம் அமைச்சரவைக்கு முக்கிய முடிவுகள் எடுப்பது மற்றும்கூடுதல் பொறுப்பு வந்து சேரும் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அந்த குழுக்களிடம் நிலுவையில் இருந்த விவகாரங்கள் குறித்து அமைச்சகங்களும், துறைகளும் உரிய முடிவு எடுக்கும்.
அமைச்சர்கள் மற்றும் அதிகாரம் பெற்ற அமைச்சர்கள் குழு கலைப்புக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
முன்னதாக முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி தான் பெரும்பாலான அதிகாரம் பெற்ற அமைச்சர்கள் குழுக்களுக்கு தலைவராக இருந்தார். ஊழல், மாநிலங்களுக்கு இடையேயான தண்ணீர் பிரச்சனை, கேஸ் விலை நிர்ணயம் உள்ளிட்டவை குறித்து முடிவு எடுக்கவே இந்த குழுக்கள் உருவாக்கப்பட்டன.
அமைச்சர்கள் குழுக்கள் அளிக்கும் பரிந்துரைகள் மத்திய அமைச்சரவையிடம் சமர்பிக்கப்பட்டு ஒப்புதல் பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications