Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் போது சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பாக நடத்தப்படும் (Caste census) என பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேரை பாகிஸ்தான் பயங்கரவாத கும்பல் சுட்டுப் படுகொலை செய்தது. இதனையடுத்து பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் கடந்த வாரம் டெல்லியில் நடைபெற்றது.

Cab

இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் பாகிஸ்தானுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு அறிவித்தது. பாகிஸ்தானுடனான சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து; பாகிஸ்தானியர்கள் அனைவரும் இந்தியாவில் இருந்து வெளியேற்றம்; பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் எண்ணிக்கை குறைப்பு; பாகிஸ்தானுடனான வாகா, அட்டாரி எல்லைகள் மூடல் உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது.

இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கான சிந்து நதிநீர் திறப்பு நிறுத்தப்பட்டது. இந்தியாவில் இருந்து ஆயிரக்கணக்கான பாகிஸ்தானியர்கள் வெளியேற்றப்பட்டனர். வாகா, அட்டாரி எல்லைகள் வழியாக பாகிஸ்தானுடனான அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டு இந்த எல்லைகள் மூடப்பட்டுள்ளன.

இதற்கு பதில் தருவதாக பாகிஸ்தானும் சில நடவடிக்கைகளை அறிவித்தது. இந்தியாவுடனான யுத்தத்தை தவிர்க்கும் சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்வது, இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தான் வான்பரப்பில் தடை, இந்தியர்கள் வெளியேற்றம் என்பது பாகிஸ்தானின் அறிவிப்பு.

இந்த நிலையில் தங்கள் நாடு மீது இந்தியா எந்த நேரத்திலும் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என பீதியில் அலறிக் கொண்டிருக்கிறது பாகிஸ்தான். இந்த அச்சத்தால் ஜம்மு காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவத்தினர் மீது தொடர்ந்து 6-வது நாளாக இன்றும் தாக்குதல் நடத்தி வருகிறது.

டெல்லியில் பிரதமர் மோடியும் நேற்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார்.

இதனைத் தொடர்ந்து டெல்லியில் இன்று அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது. 2011-ம் ஆண்டுதான் கடைசியாக மக்கள் தொகை நடத்தப்பட்டது. இனி அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பானது, ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பாக நடத்தப்படும் என்பது இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+