ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
டெல்லி: மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் போது சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பாக நடத்தப்படும் (Caste census) என பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேரை பாகிஸ்தான் பயங்கரவாத கும்பல் சுட்டுப் படுகொலை செய்தது. இதனையடுத்து பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் கடந்த வாரம் டெல்லியில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் பாகிஸ்தானுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு அறிவித்தது. பாகிஸ்தானுடனான சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து; பாகிஸ்தானியர்கள் அனைவரும் இந்தியாவில் இருந்து வெளியேற்றம்; பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் எண்ணிக்கை குறைப்பு; பாகிஸ்தானுடனான வாகா, அட்டாரி எல்லைகள் மூடல் உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது.
இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கான சிந்து நதிநீர் திறப்பு நிறுத்தப்பட்டது. இந்தியாவில் இருந்து ஆயிரக்கணக்கான பாகிஸ்தானியர்கள் வெளியேற்றப்பட்டனர். வாகா, அட்டாரி எல்லைகள் வழியாக பாகிஸ்தானுடனான அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டு இந்த எல்லைகள் மூடப்பட்டுள்ளன.
இதற்கு பதில் தருவதாக பாகிஸ்தானும் சில நடவடிக்கைகளை அறிவித்தது. இந்தியாவுடனான யுத்தத்தை தவிர்க்கும் சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்வது, இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தான் வான்பரப்பில் தடை, இந்தியர்கள் வெளியேற்றம் என்பது பாகிஸ்தானின் அறிவிப்பு.
இந்த நிலையில் தங்கள் நாடு மீது இந்தியா எந்த நேரத்திலும் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என பீதியில் அலறிக் கொண்டிருக்கிறது பாகிஸ்தான். இந்த அச்சத்தால் ஜம்மு காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவத்தினர் மீது தொடர்ந்து 6-வது நாளாக இன்றும் தாக்குதல் நடத்தி வருகிறது.
டெல்லியில் பிரதமர் மோடியும் நேற்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து டெல்லியில் இன்று அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது. 2011-ம் ஆண்டுதான் கடைசியாக மக்கள் தொகை நடத்தப்பட்டது. இனி அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பானது, ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பாக நடத்தப்படும் என்பது இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவாகும்.
-
ரேடாரில் சிக்காது.. ஈரான் அருகே ராட்சச போர்க்கப்பலை இறக்கிய இந்தியா! அமெரிக்காவுக்கு பதிலடியா? -
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்காவின் அனுமதி தேவையில்லை.. உண்மை இதுதான் -
"வேண்டாம்.." இதுவரை ஒரே ஒரு அமெரிக்க போர் விமானத்தை கூட வாங்காத இந்தியா.. என்ன காரணம் தெரியுமா? -
ஹார்முஸ் ஜலசந்தியில் முடங்கிய கப்பல்கள்.. இந்தியாவில் எரிபொருள் விற்பனைக்கு கட்டுப்பாடு? பகீர் தகவல் -
ஆரோவில் நிலம் 350 கோடி.. ஆளுநர் ஆர்.என்.ரவி, பெண் ஐஏஎஸ் அதிகாரி மீது பறந்த புகார்.. முழு விவரம் -
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி -
உங்களுக்கு பதவி வேணும்னா.. அப்போ நான் எதுக்கு.. பிரேமலதாவிடம் பொங்கிய சுதீஷ்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications