வந்தேமாதரத்தை ஏற்காதவர்கள் இந்தியாவில் வாழக்கூடாது...மத்திய இணை அமைச்சர் பேச்சு
Recommended Video
புவனேஸ்வர்: வந்தேமாதரத்தை ஏற்காதவர்களுக்கு இந்தியாவில் வாழ உரிமை கிடையாது என மத்திய இணை அமைச்சர் பிரதாப் சாரங்கி தெரிவித்துள்ளார்.
ஒடிஸாவின் மோடி என்றழைக்கபடும் பிரதாப் சாரங்கி கடந்த மக்களவைத் தேர்தலில் பாலசோர் தொகுதியில் போட்டியிட்டு முதன்முறையாக நாடாளுமன்றத்துக்கு சென்றார். இம்முறை புதுமுகங்களுக்கு கேபினட்டில் வாய்பளித்த மோடி, பிரதாப் சாரங்கியை மத்திய இணை அமைச்சர்(தனிப்பொறுப்பு) ஆக்கினார்.

வீடு, கார், உள்ளிட்ட எந்த சொத்துக்களும் இல்லாத எளிய மனிதர், தேர்தல் முடிவு அறிவிப்பதற்கு முன்பு வரை சைக்கிளில் உலா வந்தவர். மேலும், தனது பேச்சில் ஆக்ரோஷத்தையும், அதிரடியையும் காட்டாதவரும் கூட. ஆனால் அன்மைக்காலமாக அவரின் பேச்சு உள்ளிட்ட நடவடிக்கைகளில் மாற்றம் தென்படுகிறது.
காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கியது தொடர்பான விளக்கக் கூட்டம் ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் நேற்றிரவு நடைபெற்றது. ஜன் ஜாக்ரன் சபா அமைப்பு ஏற்பாடு செய்திருந்த அந்தக் கூட்டத்தில் பேசிய மத்திய இணை அமைச்சர் பிரதாப் சாரங்கி, வந்தேமாதரத்தை யார் ஏற்றுக்கொள்ளவில்லையோ, அவர்கள் இந்தியாவில் வசிக்க உரிமையில்லாதவர்கள் எனத் தெரிவித்தார்.
மேலும், மோடியின் நடவடிக்கையால் காஷ்மீர் பெண்கள் சிறந்த முறையில் தங்கள் மணவாழ்க்கையை தேர்ந்தெடுத்துக்கொள்ளக் கூடிய சூழல் உருவாகியிருப்பதாகவும், தற்போது காஷ்மீரில் அமைதி திரும்பியுள்ளதாகவும் கூறியுள்ளார். பிரிவினைவாத கும்பல்கள் தான் மத்திய அரசின் நடவடிக்கையால் ஆடிப்போய் உள்ளதாகவும், காஷ்மீர் மக்கள் ஏற்றுக்கொண்டதாகவும் கூறினார்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications