500 ரூபாய் நோட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை மத்திய அரசு தளர்த்தலாம்?
500 ரூபாய் நோட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை மத்திய அரசு தளர்த்தி உத்தரவிடலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆக்ரா: ரூபாய் நோட்டு ஒழிப்பு திட்டத்தால் ஏற்பட்டுள்ள குழப்பத்தை சற்று தணிக்கும் வகையில் அத்திட்டத்தில் பிரதமர் மோடி சிறிய திருத்தத்தை மேற்கொள்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நவம்பர் 8ம் தேதி பிரதமர் மோடி வெளியிட்ட அறிவிப்பில் ரூ. 500 மற்றும் 1000 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்திருந்தார். இதை மாற்றிக் கொள்ள அவகாசம் அளித்தும் அவர் அறிவிப்பு வெளியிட்டார். அன்று முதல் ஏகப்பட்ட குழப்பங்களை நாட்டு மக்கள் சந்தித்து வருகின்றனர்.

இதை சரி செய்ய பல்வேறு நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கியும், பிற வங்கிகளும் எடுத்து வருகின்றன. என்றாலும் போதிய அளவு 100 ரூபாய், 50 ரூபாய் உள்ளிட்ட ரூபாய் நோட்டுக்கள் இருப்பில் இல்லாததால் பெரும் குழப்பமே நிலவி வருகிறது. இந்த பிரச்சினையை இப்போதைக்கு சரி செய்ய முடியாது என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் உண்மை நிலவரத்தை அம்பலப்படுத்தி விட்டார்.
இந்த நிலையில்தான் இன்று ஆக்ராவில் பேசிய பிரதமர் மோடி, இந்தத் திட்டத்தை அவ்வப்போது ஆய்வு செய்து தேவையான திருத்தம் செய்வேன் என்று பேசினார். இது பல யூகங்களைக் கிளப்பியுள்ளது.
மாற்றம் செய்யலாம் என்ற மோடியின் பேச்சால் அவர் ரூபாய் நோட்டு ஒழிப்புத் திட்டத்தில் ஏதாவது மாற்றம் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளாரா என்ற எதிர்ராப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மக்களின் டென்ஷனைக் குறைக்கும் வகையில் சில அறிவிப்புகளை அவர் வெளியிட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
500 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை மட்டும் தளர்த்தி பழைய ரூபாய் நோட்டுக்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற அறிவிப்பு வெளியிட வாய்ப்புண்டு. அதேசமயம் பழைய 500 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்வதற்கான கால அவகாசம் சற்று கூடுதலாக்கப்படும்.
பழைய 500 ரூபாய் நோட்டுக்களை அனைத்து இடங்களிலும் வாங்க மத்திய அரசு உத்தரவிட வாய்ப்புண்டு. தற்போது அதை வங்கிகளில் மட்டுமே மாற்ற முடிகிறது. அதைத் தளர்த்தி 500 ரூபாய் நோட்டை முழுமையாக விலக்கிக் கொள்ளும் வரை பயன்படுத்த அரசு அனுமதிக்கலாம்.
அதேபோல, 100, 50 ரூபாய் நோட்டுக்கள் மற்றும் புதிய 500 ரூபாய் நோட்டுக்கள் போதிய அளவில் அச்சிடப்படும் வரை பழைய நோட்டுக்களைப் புழக்கத்தில் இருக்க மத்திய அரசு அனுமதிக்கவும் வாய்ப்புண்டு.
-
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்!












Click it and Unblock the Notifications