500 ரூபாய் நோட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை மத்திய அரசு தளர்த்தலாம்?
500 ரூபாய் நோட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை மத்திய அரசு தளர்த்தி உத்தரவிடலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆக்ரா: ரூபாய் நோட்டு ஒழிப்பு திட்டத்தால் ஏற்பட்டுள்ள குழப்பத்தை சற்று தணிக்கும் வகையில் அத்திட்டத்தில் பிரதமர் மோடி சிறிய திருத்தத்தை மேற்கொள்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நவம்பர் 8ம் தேதி பிரதமர் மோடி வெளியிட்ட அறிவிப்பில் ரூ. 500 மற்றும் 1000 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்திருந்தார். இதை மாற்றிக் கொள்ள அவகாசம் அளித்தும் அவர் அறிவிப்பு வெளியிட்டார். அன்று முதல் ஏகப்பட்ட குழப்பங்களை நாட்டு மக்கள் சந்தித்து வருகின்றனர்.

இதை சரி செய்ய பல்வேறு நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கியும், பிற வங்கிகளும் எடுத்து வருகின்றன. என்றாலும் போதிய அளவு 100 ரூபாய், 50 ரூபாய் உள்ளிட்ட ரூபாய் நோட்டுக்கள் இருப்பில் இல்லாததால் பெரும் குழப்பமே நிலவி வருகிறது. இந்த பிரச்சினையை இப்போதைக்கு சரி செய்ய முடியாது என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் உண்மை நிலவரத்தை அம்பலப்படுத்தி விட்டார்.
இந்த நிலையில்தான் இன்று ஆக்ராவில் பேசிய பிரதமர் மோடி, இந்தத் திட்டத்தை அவ்வப்போது ஆய்வு செய்து தேவையான திருத்தம் செய்வேன் என்று பேசினார். இது பல யூகங்களைக் கிளப்பியுள்ளது.
மாற்றம் செய்யலாம் என்ற மோடியின் பேச்சால் அவர் ரூபாய் நோட்டு ஒழிப்புத் திட்டத்தில் ஏதாவது மாற்றம் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளாரா என்ற எதிர்ராப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மக்களின் டென்ஷனைக் குறைக்கும் வகையில் சில அறிவிப்புகளை அவர் வெளியிட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
500 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை மட்டும் தளர்த்தி பழைய ரூபாய் நோட்டுக்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற அறிவிப்பு வெளியிட வாய்ப்புண்டு. அதேசமயம் பழைய 500 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்வதற்கான கால அவகாசம் சற்று கூடுதலாக்கப்படும்.
பழைய 500 ரூபாய் நோட்டுக்களை அனைத்து இடங்களிலும் வாங்க மத்திய அரசு உத்தரவிட வாய்ப்புண்டு. தற்போது அதை வங்கிகளில் மட்டுமே மாற்ற முடிகிறது. அதைத் தளர்த்தி 500 ரூபாய் நோட்டை முழுமையாக விலக்கிக் கொள்ளும் வரை பயன்படுத்த அரசு அனுமதிக்கலாம்.
அதேபோல, 100, 50 ரூபாய் நோட்டுக்கள் மற்றும் புதிய 500 ரூபாய் நோட்டுக்கள் போதிய அளவில் அச்சிடப்படும் வரை பழைய நோட்டுக்களைப் புழக்கத்தில் இருக்க மத்திய அரசு அனுமதிக்கவும் வாய்ப்புண்டு.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications