குடியுரிமை சட்ட திருத்தம்- முஸ்லிம்களை ஏன் சேர்க்கவில்லை? பாஜகவில் நேதாஜியின் பேரன் கலகக் குரல்
கொல்கத்தா: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்தில் முஸ்லிம்களை ஏன் சேர்க்கவில்லை? என்று மேற்கு வங்க பாஜக துணைத் தலைவரும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பேரனுமாகிய சந்திரகுமார் போஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தொடர்ச்சியாக பேரணிகளை நடத்தி வருகிறார். இதற்கு பதிலடி தரும் வகையில் பாஜக செயல் தலைவர் ஜே.பி. நட்டா நேற்று கொல்கத்தாவில் பேரணியை நடத்தினார்.

இந்நிலையில் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக மேற்கு வங்க பாஜக துணைத் தலைவர் சந்திரகுமார் போஸ் கேள்வி எழுப்பியிருப்பது சர்ச்சையாகி உள்ளது. இது தொடர்பாக அடுத்தடுத்து தமது ட்விட்டர் பக்கத்தில் கேள்விகளை அடுக்கி உள்ளார் சந்திரகுமார் போஸ்.
அதில், குடியுரிமை சட்ட திருத்தம் மத அடிப்படையிலானது அல்ல என கூறுகிறோம். பிறகு ஏன் இந்து, சீக்கியர்கள், பவுத்தர்கள், கிறிஸ்தவர்கள், பார்சிகள், ஜைனர்கள் மட்டும் இச்சட்ட திருத்தத்தில் இடம் பெற்றுள்ளனர். ஏன் முஸ்லிம்களை இதில் சேர்க்கவில்லை? எதுவும் வெளிப்படையாக இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்தியாவை பிற நாடுகளுடன் ஒப்பிடவும் முடியாது. இந்தியா என்பது அனைத்து மதம், சமூகத்தினருக்கானது என்று மற்றொரு ட்விட்டர் பதிவில் சந்திரகுமார் போஸ் பதிவு செய்துள்ளார். ஆனால் சந்திரகுமார் போஸின் இக்கருத்துகளுக்கு மேற்கு வங்க பாஜகவின் மற்றொரு துணைத் தலைவரான ஜெய் பிரகாஷ் மஜூம்தார் பதில் கொடுத்திருக்கிறார்.
இது தொடர்பாக ஜெய் பிரகாஷ் மஜூம்தார் கூறுகையில், லோக்சபா, ராஜ்யசபாவில் இம்மசோதாவை தாக்கல் செய்து பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா விரிவான விளக்கத்தைக் கொடுத்திருக்கிறார். முஸ்லிம்களை ஏன் இச்சட்ட திருத்தத்தில் சேர்க்கவில்லை என தெளிவுபடுத்தி இருக்கிறார்.
அமித்ஷாவின் பேச்சை சந்திரகுமார் போஸ் கவனிக்கவில்லை. இடதுசாரிகளும் திரிணாமுல் காங்கிரஸாரும் எழுப்பும் கேள்விகளையே சந்திரகுமார் போஸும் எழுப்புகிறார். 3 அண்டை நாடுகளில் இருந்து மதரீதியான துன்புறுத்தல்களை எதிர்கொன்டு அந்நாட்டை விட்டு வெளியேறும் சூழ்நிலைக்குள்ளாக்கப்படுகிறவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கத்தான் புதிய சட்ட திருத்தம் வழிவகை செய்கிறது என்பதை சந்திரகுமார் போஸ் புரிந்து கொள்ளவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
-
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"நாளை மத்திய அரசு இருக்காது.. அப்போ உங்களை பார்த்துக்கறோம்.." போன் போட்டு மிரட்டிய மம்தா? பரபரப்பு -
மூத்த திரிணாமுல் தலைவர் மண்டை உடைப்பு.. ரத்தம் கொட்ட கொட்ட பானர்ஜி செய்த சம்பவம்! பரபரப்பு












Click it and Unblock the Notifications