திருப்பதி கோவிலில் தர்ம தரிசனத்துக்கு முன்னுரிமை: அதிகாரிகளுக்கு சந்திரபாபு நாயுடு உத்தரவு
நகரி: திருப்பதி கோவிலில் தர்ம தரிசனத்திற்கு முன்னுரிமை வழங்கப் பட வேண்டும் என தேவஸ்தான அதிகாரிகளுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.
இம்மாதம் 21ம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரமோற்சவம் தொடங்க உள்ளது. அடுத்த மாதம் 4-ந் தேதி வரை நடக்கும் இந்த விழாவில் 1-ந் தேதி தங்க ரத பவனி நடைபெறுகிறது.

இந்தாண்டு பிரமோற்சவத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட தங்க ரதத்தில் மலையப்பசாமி உலா வர இருக்கிறார். இதற்காக புதிய தங்க ரதம் தயார் நிலையில் உள்ளது. இந்த புதிய ரதத்தில் பிரேக் போட்டால் நிற்கும் வகையில் ஹைட்ராலிக் முறையில் இதன் சக்கரம் அமைக்கப்பட்டு உள்ளது சிறாப்பம்சம் ஆகும்.
இந்தப் புதிய தங்க ரதத்தின் வெள்ளோட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது ரதத்தின் சக்கரங்களின் செயல்பாடுகளை என்ஜினீயர்கள் ஆய்வு செய்தனர்.
இதற்கிடையே நேற்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு விழா தொடர்பாக தேவஸ்தான அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் திருப்பதிக்கு வருகை தரும் பக்தர்களுக்கு ஏதேனும் வசதிக் குறைபாடு உள்ளதா என்றும், ஆன்லைன் டிக்கெட் விற்பனைக்கு மக்களிடையே உள்ள ஆதரவு குறித்தும் அவர் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அதிகாரிகள், ‘பக்தர்கள் தரிசனத்துக்கு 3 வரிசை அமுல்படுத்தப்பட்டதில் இருந்து நெரிசல் குறைந்து உள்ளது' என்று பதிலளித்தனர்.
அதனைத் தொடர்ந்து தர்ம தரிசனம் செய்யும் சாதாரண பக்தர்களுக்கு தேவஸ்தானம் முன்னுரிமை வழங்க வேண்டும் என அந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிகாரிகளுக்கு சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications