மண்டல பூஜை! சபரிமலை மலை பாதையில் சென்ற சென்னை பக்தர் மயங்கி விழுந்து பலி!
பத்தினம்திட்டா: சபரிமலையில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ள நிலையில் மலைப்பாதையில் சென்ற சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சபரிமலையில் மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி கடந்த நவம்பர் 16ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. கார்த்திகை 1 ஆன 17ஆம் தேதி முதல் வழக்கமான பூஜை வழிபாடு நடந்து வருகிறது. இந்த சீசனையொட்டி தினமும் 70 ஆயிரம் பக்தர்கள் என்ற வீதம் 2026 ஜனவரி 10ஆம் தேதி வரை தரிசன ஆன்லைன் முன்பதிவு முடிந்துவிட்டது.

இந்த நிலையில், மண்டல பூஜையையொட்டி, டிசம்பர் 26 மற்றும் 27-ம் தேதிக்கான தரிசன முன்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது இதற்கான ஆன்லைன் முன்பதிவு நேற்று மாலை தொடங்கியது. https://sabarimalaonline.org என்ற இணையதளம் மூலம் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் சபரிமலைக்கு ஆயிரக்கணக்கானோர் மாலை அணிந்து கொண்டு ஐயனை காண செல்கிறார்கள். அந்த வகையில் சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர் மாலை அணிந்து கொண்டு ஐயப்பனை காண சபரிமலைக்கு மலை பாதை வழியாக சென்றுக் கொண்டிருந்தார்.
அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை சக பக்தர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்த போது அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவர் யார் என்ற விவரங்கள் வெளியாகவில்லை. மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டது முதல் இதுவரை 19 பக்தர்கள் மாரடைப்பு, பல்வேறு உடல் உபாதைகளால் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சவுத் இந்தியன் வங்கியில் வேலை.. 50 ஆயிரத்திற்கு மேல் சம்பளம்! எக்ஸாம் கிடையாது.. நாளை தான் கடைசி டேட் -
"அப்பா- அம்மா 60வது கல்யாணத்துக்கு போகலை! ஆனா கீர்த்தி கல்யாணத்திற்கு தனி விமானத்தில் போன விஜய்!" -
சங்கீதா கொடுத்த விவாகரத்து வழக்கு.. விஜய்க்கு அதிர்ச்சி கொடுத்த மகன் ஜோசன்.. புது பஞ்சாயத்து -
1 ராஜ்ய சபா, 23 தொகுதிகள்.. காங்கிரஸ்க்கு மார்ச் 3 வரை கெடு.. தொகுதி பங்கீடு பேச்சில் நடந்தது என்ன? -
புர்ஜ் கலீஃபாவை தாக்கிய ஈரான்.. உலகின் மிக உயரமான கட்டிடத்தில் கிளம்பிய புகை! மக்கள் வெளியேற்றம் -
டேஞ்சர்.. சிவப்புக் கொடியை ஏற்றிய ஈரான்.. இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? -
கமேனி உயிரிழந்துவிட்டார்.. உறுதி செய்த ஈரான்.. அடுத்து கண்ட்ரோலை எடுக்க போவது யார்? முக்கிய தகவல் -
வாழ்வா சாவா போராட்டம்! ரஷ்யாவின் 'செக்'... சீனாவின் 'கேம்'! - ஈரானுக்காக களமிறங்கும் வல்லரசுகள்? -
கமேனி கொலை.. 3ம் உலகப்போரின் விதை.. ஈரான் உச்ச தலைவரை கொன்ற அமெரிக்கா, இஸ்ரேல்.. அடுத்து என்ன? -
ஈரானின் சுப்ரீம் லீடர் காமெனி படுகொலை? மொத்தம் 30 ஏவுகணைகள்! இஸ்ரேல் ஊடகம் சொன்ன தகவல்! -
திமுக விஸ்வரூபம் எடுத்துவிட்டது.. அதிமுக தலைவர்களை இணைப்பதன் பின்னணி இதுதான்.. பத்திரிகையாளர் மணி! -
விஜய் விவாகரத்து மோதல்.. 'ஆக்ரோஷ' சங்கீதா... பிரஸ் மீட்டில் வெடிக்கப்போகும் உண்மைகள்.. செம ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications