Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மண்டல பூஜை! சபரிமலை மலை பாதையில் சென்ற சென்னை பக்தர் மயங்கி விழுந்து பலி!

Subscribe to Oneindia Tamil

பத்தினம்திட்டா: சபரிமலையில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ள நிலையில் மலைப்பாதையில் சென்ற சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சபரிமலையில் மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி கடந்த நவம்பர் 16ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. கார்த்திகை 1 ஆன 17ஆம் தேதி முதல் வழக்கமான பூஜை வழிபாடு நடந்து வருகிறது. இந்த சீசனையொட்டி தினமும் 70 ஆயிரம் பக்தர்கள் என்ற வீதம் 2026 ஜனவரி 10ஆம் தேதி வரை தரிசன ஆன்லைன் முன்பதிவு முடிந்துவிட்டது.

sabarimala chennai death

இந்த நிலையில், மண்டல பூஜையையொட்டி, டிசம்பர் 26 மற்றும் 27-ம் தேதிக்கான தரிசன முன்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது இதற்கான ஆன்லைன் முன்பதிவு நேற்று மாலை தொடங்கியது. https://sabarimalaonline.org என்ற இணையதளம் மூலம் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் சபரிமலைக்கு ஆயிரக்கணக்கானோர் மாலை அணிந்து கொண்டு ஐயனை காண செல்கிறார்கள். அந்த வகையில் சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர் மாலை அணிந்து கொண்டு ஐயப்பனை காண சபரிமலைக்கு மலை பாதை வழியாக சென்றுக் கொண்டிருந்தார்.

அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை சக பக்தர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்த போது அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவர் யார் என்ற விவரங்கள் வெளியாகவில்லை. மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டது முதல் இதுவரை 19 பக்தர்கள் மாரடைப்பு, பல்வேறு உடல் உபாதைகளால் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+