Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சத்தீஸ்கர் காங். அரசு அதிரடி... மாட்டு கோமியத்தை 1 லிட்டர் ரூ4 கொடுத்து விவசாயிகளிடம் வாங்குகிறது!

Subscribe to Oneindia Tamil

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் ஆளும் காங்கிரஸ் அரசு, விவசாயிடம் மாடுகளின் சிறுநீரான கோமியத்தை 1 லிட்டர் ரூ4 என்ற விலைக்கு கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளது. இத்திட்டம் அடுத்த சில வாரங்களில் தொடங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

பாஜக ஆட்சி செய்கிற மாநிலங்களில் பசு பாதுகாப்பு, சாணி, கோமியம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் என பல்வேறு அதிரடிகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக உத்தரப்பிரதேச மாநில ஆளும் பாஜக அரசு பசு பாதுகாப்புத் திட்டத்தை படுதீவிரமாக செயல்படுத்தி வருகிறது.

சத்தீஸ்கர் காங். அரசு

சத்தீஸ்கர் காங். அரசு

பாஜகவுக்கு சளைத்தது அல்ல என்பதை காங்கிரஸும் சில மாநிலங்களில் செயல்படுத்தி வருகிறது. சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், பட்ஜெட் தாக்கல் செய்த போது, மாட்டு சாணத்தில் செய்த பெட்டியைத்தான் பயன்படுத்தியதாக கூறியிருந்தார்.

சாணி கொள்முதல்

சாணி கொள்முதல்

அத்துடன் கால்நடை வளர்ப்பு தொடர்பான ஏராளமான அறிவிப்புகளையும் சத்தீஸ்கர் காங்கிரஸ் அரசு தமது பட்ஜெட்டில் அறிவித்தது. அதில் கால்நடைகளின் கோமியத்தை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப் போகிறோம் என்பதும் மிக முக்கியமான அறிவிப்பு. ஏற்கனவே சத்தீஸ்கரில் கால்நடைகளின் சாணியை மாநில அரசு கொள்முதல் செய்து வருகிறது. இதனையடுத்து கோமியத்தை கொள்முதல் செய்வது தொடர்பான ஆய்வுப் பணிகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

கோமியம் கொள்முதல்

கோமியம் கொள்முதல்


தற்போது இந்த கோமியம் கொள்முதல் திட்டம் அமலுக்கு வர இருக்கிறது. Gram Gauthan Samit மூலம் கோமியம் கொள்முதல் திட்டம் செயல்படுத்தப்படும். விவசாயிகளிடம் ஒரு லிட்டர் கோமியம் ரூ4-க்கு வாங்கப்படும். விவசாயிகளுக்கு மாதம் இருமுறை கோமியத்துக்கான தொகை வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். சத்தீஸ்கர் மாநிலத்தின் உள்ளூர் திருவிழா ஜூலை 28-ல் நடைபெறும். அன்றைய தினம் இத்திட்டத்தை முதல்வர் பூபேஷ் பாகல் தொடங்கி வைக்க உள்ளார்.

கடும் விமர்சனம்

கடும் விமர்சனம்

சத்தீஸ்கர் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் காங்கிரஸின் இந்த திட்டமும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது. மத்தியில் பாஜக அரசு, மக்கள் பிரச்சனைகளை கவனத்தில் கொள்ளாமல் திசை திருப்பிவிடுவது போல சத்தீஸ்கர் காங்கிரஸ் அரசும் செயல்பட்டு வருகிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். ஏற்கனவே மத்திய பிரதேச அரசும் சாணி கொள்முதல் தொடர்பாக ஆய்வு நடத்துவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+