Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விடிஞ்சா தேர்தல்.. சத்தீஸ்கர் மாவோயிஸ்டுகள் வெறியாட்டம்.. குண்டுவெடிப்பில் 3 பேர் படுகாயம்!

Subscribe to Oneindia Tamil

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல் கட்ட சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு நாளை காலை தொடங்கும் நிலையில் மாவோயிஸ்டுகள் வெடி குண்டு தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் பாதுகாப்பு படை வீரர் ஒருவரும் தேர்தல் அதிகாரிகள் 3 பேரும் பலத்த காயமடைந்ததால் பதற்றம் நிலவுகிறது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் நாளையும் நவம்பர் 17-ந் தேதியும் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. சத்தீஸ்கரில் மொத்தம் 90 தொகுதிகள் உள்ளன. இதில் 20 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.

Chhattisgarh Maoists Attack: 3 Injured including Poll pfficials, BSF Jawan

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ள 20 தொகுதிகளில்தான் வாக்குப் பதிவு நாளை நடைபெற உள்ளது. மாவோயிஸ்டுகள், இந்த தேர்தலை பொதுமக்கள் புறக்கணிக்க வேண்டும் என ஏற்கனவே மிரட்டல் விடுத்திருந்தனர். அத்துடன் தேர்தல் பணிக்காக வாக்கு சாவடிகளுக்கு தேர்தல் அதிகாரிகள் வரக் கூடாது எனவும் அச்சுறுத்தி இருந்தனர்.

இதுநாள் வரை அமைதியாக இருந்த மாவோயிஸ்டுகள் கடந்த சில நாட்களாக தங்களது வெறித்தனத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அரசுக்கு உளவு சொன்னதாக பொதுமக்களில் ஒருவரையும் பாஜக நிர்வாகி ஒருவரையும் மாவோயிஸ்டுகள் படுகொலை செய்தனர். மேலும் வாக்கு சாவடிகளுக்கு பொதுமக்கள் வருவதை அச்சுறுத்தும் வகையில் குண்டு வெடிப்பு சம்பவங்களையும் நடத்தி வருகின்றனர்.

நாராயண்பூர் மாவட்டம் ரெங்ககாதி ரெங்ககோண்டி வாக்கு சாவடிக்கு தேர்தல் அதிகாரிகள், பாதுகாப்பு படையினருடன் சென்று கொண்டிருந்தனர். அப்போது மாவோயிஸ்டுகள் புதைத்து வைத்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்தனர். இதில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் மற்றும் தேர்தல் அதிகாரிகள் என மொத்தம் 3 பேர் படுகாயமடைந்தனர். தற்போது அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் வாக்கு சாவடிகளில் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மாவோயிஸ்டுகளின் பகுதிகளில் 126 வாக்கு சாவடிகள் முதல் முறையாக அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்கு சாவடிகள் அமைந்துள்ள பழங்குடி கிராமங்கள், நாடு விடுதலைக்குப் பின்னர் முதல் முறையாக தேர்தலில் நாளை வாக்களிக்க உள்ளனர். ஆனால் மாவோயிஸ்டுகள், பழங்குடி மக்கள் ஜனநாயகக் கடமை ஆற்றுவதைத் தடுக்கும் வகையில் இத்தகைய குண்டுவெடிப்பு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+