விடிஞ்சா தேர்தல்.. சத்தீஸ்கர் மாவோயிஸ்டுகள் வெறியாட்டம்.. குண்டுவெடிப்பில் 3 பேர் படுகாயம்!
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல் கட்ட சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு நாளை காலை தொடங்கும் நிலையில் மாவோயிஸ்டுகள் வெடி குண்டு தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் பாதுகாப்பு படை வீரர் ஒருவரும் தேர்தல் அதிகாரிகள் 3 பேரும் பலத்த காயமடைந்ததால் பதற்றம் நிலவுகிறது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் நாளையும் நவம்பர் 17-ந் தேதியும் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. சத்தீஸ்கரில் மொத்தம் 90 தொகுதிகள் உள்ளன. இதில் 20 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ள 20 தொகுதிகளில்தான் வாக்குப் பதிவு நாளை நடைபெற உள்ளது. மாவோயிஸ்டுகள், இந்த தேர்தலை பொதுமக்கள் புறக்கணிக்க வேண்டும் என ஏற்கனவே மிரட்டல் விடுத்திருந்தனர். அத்துடன் தேர்தல் பணிக்காக வாக்கு சாவடிகளுக்கு தேர்தல் அதிகாரிகள் வரக் கூடாது எனவும் அச்சுறுத்தி இருந்தனர்.
இதுநாள் வரை அமைதியாக இருந்த மாவோயிஸ்டுகள் கடந்த சில நாட்களாக தங்களது வெறித்தனத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அரசுக்கு உளவு சொன்னதாக பொதுமக்களில் ஒருவரையும் பாஜக நிர்வாகி ஒருவரையும் மாவோயிஸ்டுகள் படுகொலை செய்தனர். மேலும் வாக்கு சாவடிகளுக்கு பொதுமக்கள் வருவதை அச்சுறுத்தும் வகையில் குண்டு வெடிப்பு சம்பவங்களையும் நடத்தி வருகின்றனர்.
நாராயண்பூர் மாவட்டம் ரெங்ககாதி ரெங்ககோண்டி வாக்கு சாவடிக்கு தேர்தல் அதிகாரிகள், பாதுகாப்பு படையினருடன் சென்று கொண்டிருந்தனர். அப்போது மாவோயிஸ்டுகள் புதைத்து வைத்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்தனர். இதில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் மற்றும் தேர்தல் அதிகாரிகள் என மொத்தம் 3 பேர் படுகாயமடைந்தனர். தற்போது அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் வாக்கு சாவடிகளில் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மாவோயிஸ்டுகளின் பகுதிகளில் 126 வாக்கு சாவடிகள் முதல் முறையாக அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்கு சாவடிகள் அமைந்துள்ள பழங்குடி கிராமங்கள், நாடு விடுதலைக்குப் பின்னர் முதல் முறையாக தேர்தலில் நாளை வாக்களிக்க உள்ளனர். ஆனால் மாவோயிஸ்டுகள், பழங்குடி மக்கள் ஜனநாயகக் கடமை ஆற்றுவதைத் தடுக்கும் வகையில் இத்தகைய குண்டுவெடிப்பு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
-
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
பொறுப்பு வழங்கப்பட்டால்தானே செயல்பட முடியும்! முடிவுக்கு வரும் பாஜகவுடனான சரத்குமாரின் பயணம்? -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications