லட்டு மாதிரி தகவல்-10 நாள் கண்காணிப்பு... மாவோ தலைவர் ஹித்மாவுக்கு குறிவைத்த சத்தீஸ்கர் ஆபரேஷன்!
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் வனப்பகுதியில் பதுங்கியிருந்த ரூ25 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்டுகளின் மூத்த தலைவரான ஹித்மாவை குறிவைத்து பாதுகாப்பு படையினர் தேடுதல் நடவடிக்கையை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாவோயிஸ்டுகளின் மூத்த தலைவரான ஹித்மா சத்தீஸ்கரின் ஜோனகுடா வனப்பகுதியில்தான் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு உளவுத் தகவல்கள் கிடைத்தன. கடந்த 10 நாட்களாக ஹித்மாவின் நடவடிக்கைகளை பாதுகாப்பு படையினர் கண்காணித்தும் வந்தனர்.

ஹித்மாவை தேடி ஆபரேஷன்
ஹித்மாவை எப்படியாவது கைது செய்ய வேண்டும் என்பதற்காகவே வெள்ளிக்கிழமை இரவு பாதுகாப்பு படையினர் பிரமாண்ட ஆபரேஷனுடன் வனப்பகுதிக்குள் நுழைந்தனர். சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளின் கோட்டையாக இருக்கும் சுக்மா, பிஜப்பூர் வனப்பகுதிகளில்தான் இந்த அதிரடி வேட்டை வெள்ளிக்கிழமை இரவில் தொடங்கியது.

புதிய மாவோயிஸ்டுகள்
பாதுகாப்பு படையினர் தேடுதல் நடவடிக்கை தொடர்பான தகவல் கிடைத்ததும் தாக்குதல் நடத்த வனப்பகுதிக்குள் மாவோயிஸ்டுகள் தயாராக இருந்தனர். இந்த முறை வெடிகுண்டுகளை பயன்படுத்தாமல் பாதுகாப்பு படையினருடன் மோதுவது என்கிற திட்டத்துடன் புதியதாக பயிற்சி பெற்ற மாவோயிஸ்டுகள் களமிறக்க்கப்பட்டனராம். ஹித்மா பதுங்கி இருக்கும ஜோனகுடாவையும் பாதுகாப்பு படையினர் நெருங்கிவிட்டனர்.

மிக நெருக்கமாக மோதல்
அப்போது பாதுகாப்பு படையினருடன் மிக நெருக்கமாக நின்ற நிலையில் மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தி இருக்கின்றனர். இன்ஸ்பெக்டர் ஒருவரை முதலில் சுற்றி வளைத்த மாவோயிஸ்டுகள் அவரது கையை வெட்டி இருக்கின்றனர். பின்னர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.

கடும் வெயிலிலும் சண்டை நீடிப்பு
இதையடுத்து பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்தனர். இந்த முறை நீண்ட துப்பாக்கிச் சண்டைக்கு தயார் நிலையில்தான் மாவோயிஸ்டுகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. துப்பாக்கி சண்டை நடந்த வனப்பகுதியில் உக்கிரமான அனல் வீசியது. உச்சகட்ட வெயிலில் மாவோயிஸ்டுகள் தாக்குதலை தொடர்ந்து நீடித்துக் கொண்டே இருந்தனர்.

உயிரிழப்பு அதிகம் -காரணம்
இதனால் சகவீரர்களுக்கான உணவு, தண்ணீரை பாதுகாப்பு படையினர் நெடுந்தொலைவு கொண்டு சென்று தர வேண்டியதாக இருந்தது. காயம்பட்ட வீரர்களை உடனடியாக் வனப்பகுதியில் இருந்து மீட்டு சிகிச்சை அளிக்க முடியாத அளவுக்கு மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்திக் கொண்டே இருந்தனர். இதுவும் நமது வீரர்கள் உயிரிழப்பு எண்ணிகை அதிகரிக்க ஒரு காரணம் என்கின்றனர் பாதுகாப்பு படையினர்.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications