Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லட்டு மாதிரி தகவல்-10 நாள் கண்காணிப்பு... மாவோ தலைவர் ஹித்மாவுக்கு குறிவைத்த சத்தீஸ்கர் ஆபரேஷன்!

Subscribe to Oneindia Tamil

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் வனப்பகுதியில் பதுங்கியிருந்த ரூ25 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்டுகளின் மூத்த தலைவரான ஹித்மாவை குறிவைத்து பாதுகாப்பு படையினர் தேடுதல் நடவடிக்கையை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாவோயிஸ்டுகளின் மூத்த தலைவரான ஹித்மா சத்தீஸ்கரின் ஜோனகுடா வனப்பகுதியில்தான் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு உளவுத் தகவல்கள் கிடைத்தன. கடந்த 10 நாட்களாக ஹித்மாவின் நடவடிக்கைகளை பாதுகாப்பு படையினர் கண்காணித்தும் வந்தனர்.

ஹித்மாவை தேடி ஆபரேஷன்

ஹித்மாவை தேடி ஆபரேஷன்

ஹித்மாவை எப்படியாவது கைது செய்ய வேண்டும் என்பதற்காகவே வெள்ளிக்கிழமை இரவு பாதுகாப்பு படையினர் பிரமாண்ட ஆபரேஷனுடன் வனப்பகுதிக்குள் நுழைந்தனர். சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளின் கோட்டையாக இருக்கும் சுக்மா, பிஜப்பூர் வனப்பகுதிகளில்தான் இந்த அதிரடி வேட்டை வெள்ளிக்கிழமை இரவில் தொடங்கியது.

புதிய மாவோயிஸ்டுகள்

புதிய மாவோயிஸ்டுகள்

பாதுகாப்பு படையினர் தேடுதல் நடவடிக்கை தொடர்பான தகவல் கிடைத்ததும் தாக்குதல் நடத்த வனப்பகுதிக்குள் மாவோயிஸ்டுகள் தயாராக இருந்தனர். இந்த முறை வெடிகுண்டுகளை பயன்படுத்தாமல் பாதுகாப்பு படையினருடன் மோதுவது என்கிற திட்டத்துடன் புதியதாக பயிற்சி பெற்ற மாவோயிஸ்டுகள் களமிறக்க்கப்பட்டனராம். ஹித்மா பதுங்கி இருக்கும ஜோனகுடாவையும் பாதுகாப்பு படையினர் நெருங்கிவிட்டனர்.

மிக நெருக்கமாக மோதல்

மிக நெருக்கமாக மோதல்

அப்போது பாதுகாப்பு படையினருடன் மிக நெருக்கமாக நின்ற நிலையில் மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தி இருக்கின்றனர். இன்ஸ்பெக்டர் ஒருவரை முதலில் சுற்றி வளைத்த மாவோயிஸ்டுகள் அவரது கையை வெட்டி இருக்கின்றனர். பின்னர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.

கடும் வெயிலிலும் சண்டை நீடிப்பு

கடும் வெயிலிலும் சண்டை நீடிப்பு

இதையடுத்து பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்தனர். இந்த முறை நீண்ட துப்பாக்கிச் சண்டைக்கு தயார் நிலையில்தான் மாவோயிஸ்டுகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. துப்பாக்கி சண்டை நடந்த வனப்பகுதியில் உக்கிரமான அனல் வீசியது. உச்சகட்ட வெயிலில் மாவோயிஸ்டுகள் தாக்குதலை தொடர்ந்து நீடித்துக் கொண்டே இருந்தனர்.

உயிரிழப்பு அதிகம் -காரணம்

உயிரிழப்பு அதிகம் -காரணம்

இதனால் சகவீரர்களுக்கான உணவு, தண்ணீரை பாதுகாப்பு படையினர் நெடுந்தொலைவு கொண்டு சென்று தர வேண்டியதாக இருந்தது. காயம்பட்ட வீரர்களை உடனடியாக் வனப்பகுதியில் இருந்து மீட்டு சிகிச்சை அளிக்க முடியாத அளவுக்கு மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்திக் கொண்டே இருந்தனர். இதுவும் நமது வீரர்கள் உயிரிழப்பு எண்ணிகை அதிகரிக்க ஒரு காரணம் என்கின்றனர் பாதுகாப்பு படையினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+