லட்டு மாதிரி தகவல்-10 நாள் கண்காணிப்பு... மாவோ தலைவர் ஹித்மாவுக்கு குறிவைத்த சத்தீஸ்கர் ஆபரேஷன்!
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் வனப்பகுதியில் பதுங்கியிருந்த ரூ25 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்டுகளின் மூத்த தலைவரான ஹித்மாவை குறிவைத்து பாதுகாப்பு படையினர் தேடுதல் நடவடிக்கையை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாவோயிஸ்டுகளின் மூத்த தலைவரான ஹித்மா சத்தீஸ்கரின் ஜோனகுடா வனப்பகுதியில்தான் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு உளவுத் தகவல்கள் கிடைத்தன. கடந்த 10 நாட்களாக ஹித்மாவின் நடவடிக்கைகளை பாதுகாப்பு படையினர் கண்காணித்தும் வந்தனர்.

ஹித்மாவை தேடி ஆபரேஷன்
ஹித்மாவை எப்படியாவது கைது செய்ய வேண்டும் என்பதற்காகவே வெள்ளிக்கிழமை இரவு பாதுகாப்பு படையினர் பிரமாண்ட ஆபரேஷனுடன் வனப்பகுதிக்குள் நுழைந்தனர். சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளின் கோட்டையாக இருக்கும் சுக்மா, பிஜப்பூர் வனப்பகுதிகளில்தான் இந்த அதிரடி வேட்டை வெள்ளிக்கிழமை இரவில் தொடங்கியது.

புதிய மாவோயிஸ்டுகள்
பாதுகாப்பு படையினர் தேடுதல் நடவடிக்கை தொடர்பான தகவல் கிடைத்ததும் தாக்குதல் நடத்த வனப்பகுதிக்குள் மாவோயிஸ்டுகள் தயாராக இருந்தனர். இந்த முறை வெடிகுண்டுகளை பயன்படுத்தாமல் பாதுகாப்பு படையினருடன் மோதுவது என்கிற திட்டத்துடன் புதியதாக பயிற்சி பெற்ற மாவோயிஸ்டுகள் களமிறக்க்கப்பட்டனராம். ஹித்மா பதுங்கி இருக்கும ஜோனகுடாவையும் பாதுகாப்பு படையினர் நெருங்கிவிட்டனர்.

மிக நெருக்கமாக மோதல்
அப்போது பாதுகாப்பு படையினருடன் மிக நெருக்கமாக நின்ற நிலையில் மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தி இருக்கின்றனர். இன்ஸ்பெக்டர் ஒருவரை முதலில் சுற்றி வளைத்த மாவோயிஸ்டுகள் அவரது கையை வெட்டி இருக்கின்றனர். பின்னர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.

கடும் வெயிலிலும் சண்டை நீடிப்பு
இதையடுத்து பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்தனர். இந்த முறை நீண்ட துப்பாக்கிச் சண்டைக்கு தயார் நிலையில்தான் மாவோயிஸ்டுகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. துப்பாக்கி சண்டை நடந்த வனப்பகுதியில் உக்கிரமான அனல் வீசியது. உச்சகட்ட வெயிலில் மாவோயிஸ்டுகள் தாக்குதலை தொடர்ந்து நீடித்துக் கொண்டே இருந்தனர்.

உயிரிழப்பு அதிகம் -காரணம்
இதனால் சகவீரர்களுக்கான உணவு, தண்ணீரை பாதுகாப்பு படையினர் நெடுந்தொலைவு கொண்டு சென்று தர வேண்டியதாக இருந்தது. காயம்பட்ட வீரர்களை உடனடியாக் வனப்பகுதியில் இருந்து மீட்டு சிகிச்சை அளிக்க முடியாத அளவுக்கு மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்திக் கொண்டே இருந்தனர். இதுவும் நமது வீரர்கள் உயிரிழப்பு எண்ணிகை அதிகரிக்க ஒரு காரணம் என்கின்றனர் பாதுகாப்பு படையினர்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications