For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிறுநீரகங்கள் செயலிழந்த நிலையில் சோட்டா ராஜன்... கிட்னி மாற்று ஆபரேஷனுக்காக சரண்டர்?

By Mathi
Google Oneindia Tamil News

மும்பை: தமது 2 சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்ட நிலையில் கிட்னி மாற்று ஆபரேஷனுக்காகத்தான் சோட்டா ராஜன் சரணடைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மும்பை நிழல் உலக தாதாக்களில் ஒருவரான சோட்டா ராஜன், இந்தியாவில் 20 ஆண்டுகாலமாக தேடப்படும் குற்றவாளி. ஆஸ்திரேலியாவில் பதுங்கியிருந்த சோட்டா ராஜன் இந்தோனேசியாவின் பாலி தீவில் இண்டர்போல் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

சோட்டா ராஜன் கைது தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. தமது எதிரியான மற்றொரு நிழல் உலக தாவூத் இப்ராகிமிடம் இருந்து தப்பிக்கவே சோட்டா சரணடைந்ததாக கூறப்பட்டது.... தாவூத்தை நெருங்குவதற்காகத்தான் சோட்டா ராஜனை இந்தியாவுக்கு கொண்டுவருகிறது மத்திய அரசு என்றும் ஒரு தகவல் கூறுகிறது.

Chhota Rajan plan his arrest for kidney transplant?

இந்த நிலையில்தான் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளதான் சோட்டா ராஜன் சரணடைந்திருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. சோட்டா ராஜனின் 2 சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்ட நிலையில் டயாலிஸிஸ் செய்து கொண்டிருந்தாராம் சோட்டா. தற்போது அதுவும் பலனளிக்காத நிலையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயத்தில் சோட்டா இருக்கிறாராம்.. இதற்காத்தான் தாமே முன்வந்து இண்டர்போல் போலீசிடம் அவர் சரணடைந்தார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

English summary
Gangster chota rajan will soon be deported to India from Bali. And from the time the officials had a big catch on him, there are reports of him planning his own arrest. But there is one very strong reason for him to surrender. That is his kidney transplant.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X