எல்லையில் பதற்றத்தை தணிக்க இந்தியா ராணுவத்தைத் திரும்பப் பெற வேண்டும்: சீனா
டெல்லி: எல்லையில் பதற்றத்தைத் தணிக்க இந்தியா தமது ராணுவத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது.
Recommended Video
லடாக் எல்லையில் கால்வன் பள்ளத்தாக்கை சீனா ஆக்கிரமிக்க முயன்றது. இதில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து இந்தியா-சீனா இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

ஆனாலும் சீனா எல்லையில் தயார்நிலையில் படைகளை குவித்து வந்தது. இதனால் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடித்தது. இந்த நிலையில் தென் சீனா கடற்பரப்புக்கு இந்தியாவின் போர்க் கப்பல் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் லடாக் எல்லையில் பாங்காங் திசோவில் சீனா மீண்டும் அத்துமீறி நுழைய முயன்றது. இதனை எல்லையில் தயார் நிலையில் இருந்த இந்திய வீரர்கள் வெற்றிகரமாக முறியடித்தனர். இதனால் இந்தியா-சீனா இடையே மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து இருநாடுகளும் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன. இதனிடையே எல்லையில் பதற்றத்தைத் தணிக்க இந்தியா தமது ராணுவத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று சீனா வலியுறுத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications