காணாமல் போன அருணாச்சல பிரதேச இளைஞரை ஒப்படைத்தது சீனா ராணுவம்
இடாநகர்: காணாமல் போன அருணாச்சல பிரதேச இளைஞரை இன்று இந்திய ராணுவத்தினரிடம் சீனா ராணுவம் ஒப்படைத்தது.
அருணாச்சல பிரதேசத்தை தங்களது நாட்டின் ஒருபகுதியாக உரிமை கோரி வருகிறது சீனா. ஆனால் அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிதான் என்பதில் நமது மத்திய அரசுகள் திட்டவட்டமாக உள்ளன.

அருணாச்சல பிரதேச எல்லையில் படைகளைக் குவிப்பதும் ஊடுருவ முயற்சிப்பதும் சீனாவின் தொடர் வாடிக்கை. மேலும் அருணாச்சல பிரதேச பகுதிகளுக்கு சீனா புதிய பெயர்களையும் சூட்டியுள்ளது.

அத்துடன் மத்திய அமைச்சர்கள் அருணாச்சல பிரதேச மாநிலத்துக்கு சென்றாலே எதிர்ப்பு தெரிவிப்பதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறது சீனா. இந்த நிலையில் அண்மையில் அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் திடீரென காணாமல் போனார். அந்த இளைஞரை சீனா ராணுவம்தான் கடத்தி இருக்கலாம் எனவும் கூறப்பட்டது.

Recommended Video
இதனைத் தொடர்ந்து அந்த இளைஞர் குறித்த விவரங்களை சீனா ராணுவத்துக்கு நமது ராணுவம் பகிர்ந்தது. தொடக்கத்தில் அந்த இளைஞர் தங்கள் பகுதியில் இல்லவே இல்லை என கைவிரித்தது சீனா. இப்போது தங்கள் பகுதியில் அந்த இளைஞர் இருப்பதை உறுதி செய்தது. அத்துடன் இந்திய ராணுவ அதிகாரிகளிடம் அந்த இளைஞர் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இதனை மத்திய அமைச்சர் கிரென் ரிஜுஜூ உறுதி செய்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications