சத்தீஸ்கரில் தேவாலயம் தாக்கப்பட்டது குறித்து மாநில அரசிடம் விளக்கம் கேட்கும் மோடி அரசு
டெல்லி: சத்தீஸ்கரில் தேவாலயம் ஒன்று தாக்கப்பட்டுள்ளது குறித்து அம்மாநில அரசிடம் மத்திய அரசு விளக்கம் கேட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூர் அருகே உள்ள தேவாலயம் ஒன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனை கூட்டம் நடந்தது. அப்போது 8 முதல் 9 பைக்குகளில் வந்த 15 பேர் கொண்ட கும்பல் தேவாலயத்திற்குள் புகுந்து அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தியது.

அந்த கும்பல் ஜெய் ஸ்ரீராம் என்று சொல்லிக் கொண்டே தேவாலயத்தில் தாக்குதல் நடத்தியதில் 2 பெண்கள் உள்பட 5 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இதுவரை 7 பேரை கைது செய்துள்ளனர்.
தேவாலயத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சத்தீஸ்கர் மாநில கிறிஸ்தவ அசோசிஷேயன் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து மத்திய அரசு மாநில அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது.












Click it and Unblock the Notifications