மகாராஷ்டிராவில் மோடிக்கு இணையாக 'சி.எம்.' பிரபலம்: கருத்துக்கணிப்பு முடிவால் பாஜகவினர் 'ஷாக்'
மும்பை: மகாராஷ்டிராவில் பாஜகவினரிடையே நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு நிகராக அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்நாவிஸும் பிரபலமாக இருப்பது தெரிய வந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநில பாஜகவினரிடையே கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் ஸ்வேதா ஷாலினி தலைமையிலான குழு இந்த கருத்துக்கணிப்பை நடத்தியது.
கருத்துக்கணிப்பின் முடிவு நாசிக்கில் நடந்த மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் வெளியிடப்பட்டது.

பட்நாவிஸ்
மகாராஷ்டிராவில் மோடிக்கு இணையாக அம்மாநில முதல்வர் பட்நாவிஸும் பிரபலமாக இருப்பது கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது. கருத்துக்கணிப்பு முடிவு பாஜகவினர் பலருக்கு பிடிக்கவில்லை. அதனால் அவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

மோடி
2013-2014ம் ஆண்டில் அதாவது மோடி அலை ஓயாமல் வீசியபோது நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் மோடியின் செயல்பாடுகள் திருப்தி அளிப்பதாக 40 சதவீதம் பேர் தெரிவித்திருந்தனர். அந்த எண்ணிக்கை தற்போது 25 சதவீதமாக குறைந்துள்ளது.

ஆதரவு
மோடிக்கு எப்படி 25 சதவீதம் பேர் ஆதரவு அளித்துள்ளனரோ அதே போன்று 25 சதவீதம் பேர் பட்நாவிஸின் செயல்பாடுகள் திருப்திகரமாக உள்ளது என்று தெரிவித்துள்ளனர். இது கருத்துக்கணிப்பு எல்லாம் இல்லை. லோக்சபா தேர்தல் மற்றும் உள்ளூர் தேர்தலின்போது நிலைமை மாறுவதை இது காண்பித்துள்ளது என்று பட்நாவிஸ் கூறியுள்ளார்.

தொண்டர்கள்
2013-2014ம் ஆண்டு தேர்தலின்போது கட்யினரில் 40 சதவீதம் பேர் தேர்தல் பணியாற்றியுள்ளனர். அந்த எண்ணிக்கை தற்போது 15 சதவீதமாக குறைந்துவிட்டது. 2013-2014ம் ஆண்டு நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின்போது 15 ததவீதம் பேர் பாஜகவுடன் சேர்ந்து பணியாற்ற விரும்பினர். அந்த எண்ணிக்கை தற்போது 25 சதவீதமாக அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications