ஊழல் அரசியல்வாதிகளை அம்பலப்படுத்தப் போகிறது கோப்ராபோஸ்ட்!
டெல்லி: ஊழல் அரசியல் தலைவர்கள் பலரை இன்று அம்பலப்படுத்தப் போவதாக கோப்ராபோஸ்ட் புலனாய்வு செய்தி இணையதளம் தெரிவித்துள்ளது.
ஸ்டிங் ஆபரேஷன் மூலம் இவர்களை அம்பலப்படுத்தவுள்ளதாம் கோப்ராபோஸ்ட். டெல்லியில் இன்று இவர்கள் குறித்த விவரங்களை வெளியிடப் போவதாகவும் அது தெரிவித்துள்ளது.
லஞ்சம் வாங்குவது போலவும், பிற சட்டவிரோத செயல்களில் தொடர்பு உள்ளது போலவும் இந்த காட்சிகளில் இடம் பெறுகிறதாம். கட்சி பாகுபாடற்று பல தலைவர்களும் இதில் சிக்கியுள்ளனர்.
இந்த ஊழல்வாதிகள் தொடர்பான காட்சிகளை திரையிட்டுக் காட்டி அம்பலப்படுத்தப் போவதாக கோப்ராபோஸ்ட் தெரிவித்துள்ளது.
இந்த ஊழல்வாதிகள் பட்டியலில் நம்ம தலைவர்கள் யாரேனும் இருப்பார்களோ என்று பல கட்சிகளும் பீதியில் உள்ளனராம். குறிப்பாக பாஜகவினர் தான் பெரும் பீதியில் மூழ்கியுள்ளனராம்.
சமீபத்தில்தான் கோப்ராபோஸ்ட்டும், குலைல் என்ற இன்னொரு இணையதளமுநம் சேர்ந்து அமித் ஷா குறித்த பரபரப்புத் தகவலை வெளியிட்டன. அதாவது, நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பரான அமித் ஷா, இளம் பெண் ஒருவரை வேவு பார்க்க உத்தரவிட்டது தொடர்பான தகவல் அது. அது பெரும் பரபரப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.
மேலும் ஆபரேஷன் ப்ளூ வைரஸ் என்ற பெயரில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் கூலிக்காக அரசியல்வாதிகளுக்கு மாரடிக்கும் அவலத்தையும் அம்பலப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இன்றைய ஸ்டிங் ஆபரேஷனில் சிக்கி நாறப் போவது யாரோ....