Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஏன் மறைச்சே.. ஏன் என்னை ஏமாத்துனே.. உலுக்கி எடுத்த பாத்திமா.. கடைசியில் தற்கொலை!

Subscribe to Oneindia Tamil

சித்தூர்: "ஏன் என்கிட்ட இருந்து மறைச்சே.. ஏன் என்னை ஏமாத்தினே" என்று கேள்வி கேட்டு பாத்திமா காதலனை உலுக்கி எடுத்துவிட்டார்.. இறுதியில் ஏமாற்றத்தை தாங்கி கொள்ள முடியாமல் தற்கொலையே செய்து கொண்டார்.

சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சர்தார். இவரது மகள் பாத்திமா.. 19 வயதாகிறது.. மதனப்பள்ளியில் ஒரு தனியார் காலேஜில் பி.காம்.2வது வருஷம் படித்து வந்தார்.

college girl student committed suicide in chittoor

இவர் இப்ராகிம் என்பவரை விரும்பினார்.. இப்ராகிம் இவர் வீட்டு பகுதியிலேயே வசிப்பவர்.. ஆட்டோ ஓட்டுகிறார்.. 2 வருடமாக அதிதீவிரமாக இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

இந்த சமயத்தில்தான், இப்ராகிமுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி, 2 குழந்தைகள் உள்ள சமாச்சாரம் பாத்திமாவுக்கு தெரியவந்தது.. விஷயத்தை தெரிந்து கொதித்து போனார் பாத்திமா.. இப்ராகிடம் சென்று, "ஏன் என்னை ஏமாற்றினே.. ஏன் என்கிட்ட கல்யாணம் ஆனதை மறைச்சே.." என்று கேட்டார். இதுதான் இருவருக்கும் தகராறாக உருமாறியது.

இந்த சண்டைக்கு பிறகு பாத்திமா மிகவும் மனம் உடைந்து காணப்பட்டார்.. காலேஜ்-க்கும் போகவில்லை. இந்த ஏமாற்றத்தை அவரால் தாங்கவே முடியவில்லை.. அதனால் வீட்டின் ஒரு ரூமில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மகள் பிணமாக தொங்குவதை கண்டு பெற்றோர் அலறி கதறினர்.. சித்தூர் 2-டவுன் போலீசாரும் தகவலறிந்து வந்து சடலத்தை மீட்டனர்.

பாத்திமா இறந்தது தெரிந்ததுமே இப்ராகிம் ஆளை காணோம்.. அதனால், பாத்திமாவின் பெற்றோர், உறவினர்கள் இப்ராகிமை கைது செய்யக்கோரி பாத்திமாவின் சடலத்துடன் டவுன் போலீஸ் நிலையத்தை முற்றுகையில் ஆவேசமாக ஈடுபட்டனர். இப்ராகிமை உடனேகைது செய்கிறோம் என்று போலீசார் வாக்கு தந்ததுடன், தலைமறைவானவரையும் தேடி வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+