காங்கிரஸின் டபுள் கேம்.. வேலையை காட்டிய ராகுல் காந்தியின் டீம்! கேரளாவில் ஷாக்
திருவனந்தபுரம்: வளர்த்த கிடா மார்பில் பாய்வது வழக்கமானதுதான்.. ஆனால், இந்த கதர் கிடாக்கள் கூட்டணிக்கு எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கெல்லாம் பாய்கிறார்களே! என்று உடன் பிறப்புகள் புலம்பி வரும் நிலையில், கேரளத்தில் காங்கிரஸின் டபுள் கேம் ஒன்று வெட்ட வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
நம்பிக்கை, நாணயம்.. அதுக்கு நாங்கள்தான் ஒரே ஆள் என்று, நகைக்கடை விளம்பரம் போல கேரளாவில் காங்கிரஸ் தலைவர்கள், வெற்றி பெற்ற தொகுதிகளில் மக்களுக்கு நன்றி கூறி வருகின்றனர். எல்லாம் ஓகேதான். ஆனால், கேரள முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட் வி.டி.சதீசன் ஏன் பிரதமர் மோடியை அவசரமாக சந்தித்தார் என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பிரச்சனை என்ன?
பாஜகவுக்கு மாற்று நாங்கள்தான் என்று காங்கிரஸ் தொடர்ந்து கூறி வருகிறது. இதை நம்பிதான் கேரள மக்கள் அக்கட்சிக்கு வாக்களித்து ஆட்சியில் உட்கார வைத்திருக்கிறார்கள். இப்படி இருக்கையில், முதலமைச்சராகி 30 நாட்கள் கூட முழுசாக முடிவதற்குள், வி.டி.சதீசன் அவரசமாக பிரதமர் மோடியை போய் சந்திக்க வேண்டிய தேவை என்ன? என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.
பிஎம் ஸ்ரீ திட்டம்
இந்த சந்திப்பின் பின்னணியில், மத்திய அரசின் திட்டங்கள் அமல்படுத்தப்படுவது குறித்து பேசப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. அதிலும் குறிப்பாக பிஎம் ஸ்ரீ திட்டம் கேளராவில் சீக்கிரமே அமலாகும் என்று அரசியல் விமர்சகர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த திட்டத்தை கொண்டு வந்தால் மும்மொழிக்கொள்கையை அமல்படுத்த வேண்டி இருக்கும். தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்கள் இந்த மும்மொழிக்கொள்கையை கடுமையாக எதிர்க்கின்றன. காங்கிரஸும் கூட இதை இந்த மாநிலங்களில் மும்மொழிக்கொள்கையை எதிர்க்கிறது. இப்படி திட்டத்தை எதிர்த்துக்கொண்டே, மறுபுறம் திட்டத்தை அமல்படுத்த தயாராவது.. மக்களின் முதுகில் குத்தும் செயல் என்று கேரள எதிர்க்கட்சியான சிபிஎம் விமர்சித்திருக்கிறது.
டபுள் கேம்
தமிழ்நாட்டில் திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் கழன்று சென்றிருப்பதால், கதர் தலைவர்கள் காலை வாரிவிட்டனர் என்று உடன்பிறப்புகள் காங்கிரஸை அட்டாக் செய்து வருகின்றனர். இப்படி இருக்கையில், கேளராவிலும் ஓட்டு போட்ட மக்களுக்கு.. நம்பிக்கை துரோகம் செய்யும் விதமாக காங்கிரஸ் செயல்பட்டு வருவதாக அரசியல் விமர்சகர்கள் கூறியிருப்பது.. காங்கிரஸ் கட்சி மீதான நம்பிக்கையை மீது கேள்வி எழுப்பியிருக்கிறது.
-
ஒரே நாளில் 13 லட்சம் உறுப்பினர்கள்.. குவியும் ஆதரவு.. நன்றி தெரிவித்த அண்ணாமலை! -
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS! -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
சும்மா தூக்கிக் கொடுக்கல விஜய்.. காங்கிரஸுக்கு எதுக்கு எம்பி பதவி! தவெகவின் டெல்லி ‘மாஸ்டர்’ ப்ளான்! -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
சொந்த தொகுதியில் டெபாசிட் வாங்க முடியல! எங்களை விமர்சிப்பதா? ஒரே காமெடி! சீமானுக்கு காங்கிரஸ் பதிலடி -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மேகதாதுவால் வெடித்தது அடுத்த போர்! கதி கலங்கி நிற்கும் காங்கிரஸ்.. டெல்லி வரை போன மேட்டர்! -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்! -
தவெக - காங்கிரஸ் கூட்டணிக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. முத்தரசன் சொன்ன வார்த்தை!













Click it and Unblock the Notifications