For Daily Alerts
Just In
எடியூரப்பா அரசுக்கு எதிராக வாக்களிக்க காங். கொறடா உத்தரவு-மாறி வாக்களித்தால் எம்எல்ஏ பதவி பறிபோகும்
பெங்களூர்: நம்பிக்கை வாக்கெடுப்பையடுத்து, விப் உத்தரவு பிறப்பித்தது காங்கிஸ். எந்த ஒரு எம்எல்ஏவும் வாக்களிப்பில் பங்கேற்காமல் இருக்க கூடாது எனவும், அனைவரும் எடியூரப்பா தலைமையிலான அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்றும் கொறடா உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
விப் உத்தரவை மீறி செயல்படுவோர் எம்எல்ஏ பதவியை இழக்க வேண்டியிருக்கும் என்பதால் இந்த உத்தரவு முக்கியத்துவம் பெறுகிறது. 2 காங்கிரஸ் எம்எல்ஏக்களான பிரதாப் கவுடா பாட்டீல் மற்றும் ஆனந்த்சிங் ஆகியோர் பெங்களூரிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கியுள்ளனர். இன்னும் அவர்கள் சட்டசபை பதவியேற்பு விழாவில் பங்கேற்க வரவில்லை.
இந்த நிலையில் கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Comments
English summary
Congress issue Whip over vote of confident.