ராகுலை ‘ஜோக்கர்’ என்று கிண்டலடித்த கேரள முன்னாள் அமைச்சர் சஸ்பென்ட்!

தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது குறித்து கேரள மாநில முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் முஸ்தபா நேற்று முன்தினம் கொச்சியில் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது ‘தேர்தல் பிரசாரத்தின்போது, கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி, தனிக்குழுவை சார்ந்தே பிரசாரம் செய்தார். ஒரு ‘ஜோக்கர்' போல அவர் செயல்பட்டது வெற்றியை தரவில்லை. எனவே அவர் கட்சி பதவியில் தொடரக்கூடாது. உடனடியாக அவர் ராஜினாமா செய்ய வேண்டும். அல்லது அவரை கட்சி பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பகிரங்கமாக போர்க்கொடி தூக்கினார்.
இது கேரள காங்கிரஸ் கட்சியினரிடையே மட்டுமல்லாமல், தேசிய அளவில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் முஸ்தபா மீது காங்கிரஸ் கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுகுறித்து கேரள மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் வி.எம்.சுதீரன் தெரிவிக்கையில், ‘முன்னாள் அமைச்சர் முஸ்தபா, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்படுகிறார். அவருடைய பேச்சுக்கு அவரிடம் விளக்கம் பெறப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications