இமாச்சல பிரதேசத்தில் பாஜக நோ.. காங்கிரஸ் தான் ஆட்சி அமைக்கும்.. இந்தியா டுடே எக்ஸிட் போல்
சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்றும் அந்த கட்சி 30-40 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகவும் இந்தியா டுடே வெளியிட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
மலைப்பிரதேசங்களையும் பனிபடர்ந்த ரம்மியமான இயற்கை சூழலையும் கொண்ட இமாசல பிரதேச மாநிலத்தில் கடந்த நவம்பர் 12 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.
மொத்தம் 68 தொகுதிகளை கொண்ட இமாசல பிரதேசத்தில் தற்போது பாஜக ஆட்சியில் உள்ளது.

இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல்
ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் விடாப்படியாய் இருக்கும் பாஜக இதற்காக அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டது. அதேநேரத்தில் பறிகொடுத்த ஆட்சியை மீண்டும் கைப்பற்றிவிட வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சி ஆர்வம் காட்டி வருகிறது. ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் கட்சிகளும் இமாசல பிரதேச சட்டமன்ற தேர்தலில் போடியிட்டன. தேர்தலில் 65.92 சதவீத வாக்குகள் பதிவானது.

எந்த கட்சிக்கு வெற்றி வாய்ப்பு
கடந்த மாதம் 12 ஆம் தேதியே வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தாலும் வாக்கு எண்ணிக்கை வரும் வியாழக்கிழமைதான் நடைபெறுகிறது. இமாசல பிரதேசத்தில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 35 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். குஜராத் இரண்டாம் கட்ட தேர்தல் முடிந்த நிலையில், இமாசல பிரதேச சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெற என்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன் விவரத்தை காணலாம்.

காங்கிரசுக்கு வெற்றி
அதன்படி இந்தியா டுடே வெளியிட்ட கருத்துக்கணிப்பில் காங்கிரஸ்க்கு வெற்றி வாய்ப்பு என்று கூறப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 68 தொகுதிகளில் காங்கிரஸ் 30-40-ல் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சியாக இருக்கும் பாஜக 24-34 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் ஆம் ஆத்மி கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது என்று கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுகின்றன. அதேவேளையில் பிற கட்சிகள் 4-8 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்சி மாற்றம் ஏற்படுகிறதா..
இமாசல பிரதேசத்தில் பெரும்பாலான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பாஜகவுக்கே சாதகமாக வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், இந்தியா டுடே வெளியிட்ட கருத்துக்கணிப்பு காங்கிரஸ் கட்சி 30-40 இடங்கள் வெல்லும் என்று கூறியிருக்கிறது. இதனால், இமாசல பிரதேசத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுகிறதா? என்ற எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளன. இருந்தாலும் மக்களின் உண்மையான தீர்ப்பு வரும் 8 ஆம் தேதி தான் தெரியும் என்பதால் அன்றைய தினம் தான், இமாசல பிரதேசத்தில் அடுத்த ஆண்டுகள் யார் ஆட்சி அமைகிறது என்பது உறுதியாக தெரியும்.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications