ஸ்ரீசாந்த் தந்தையானார்... மனைவிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது!
கொச்சி: சூதாட்டத்தில் சிக்கி கிரிக்கெட் வாழ்க்கையை இழந்து சிறைக்குச் சென்று பின்னர் ஜாமீனில் வெளியாகி திருமணமும் செய்து கொண்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்தின் மனைவிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.
அன்னையர் தினத்திற்கு ஒரு நாள் முன்னதாக நேற்று குழந்தை பிறந்துள்ளது ஸ்ரீசாந்த் மற்றும் அவரது மனைவி புவனேஸ்வரி குமாரியை சந்தோஷமடைய வைத்துள்ளதாம்.

இதுகுறித்து ஸ்ரீசாந்த் வெளியிட்டுள்ள டிவிட்டில், அன்னையர் தினத்தையொட்டி எங்களுக்கு அருமையான ஒரு பெண் தேவதை குழந்தையாக வந்து பிறந்துள்ள செய்தியை அனைவரிடமும் பகிர்ந்து கொள்வதில் பெருமை அடைகிறேன் என்று கூறியுள்ளார் ஸ்ரீசாந்த்.
புவனேஸ்வரி தேவி, ராஜஸ்தானைச் சேர்ந்த அரச குடும்பத்துப் பெண் ஆவார். இருவருக்கும் 2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் நடந்தது.
ஸ்ரீசாந்த் மீதான சூதாட்ட வழக்கில் இந்த மாத இறுதியில் தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கிலிருந்து தான் விடுதலையாவேன் என்று நம்பிக்கையுடன் இருக்கிறார் ஸ்ரீசாந்த்.
27 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 87 விக்கெட்களையும், 53 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 75 விக்கெட்களையும், 10 டுவென்டி 20 போட்டிகளில் ஆடி 7 விக்கெட்களையும் ஸ்ரீசாந்த் வீழ்த்தியுள்ளார்.
சூதாட்ட வழக்கில் சிக்கிய பின்னர் அவர் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications