2-வது மனைவி சத்யபிரியா முதல் திருமணத்தை மறைத்தார்: சசிகலா புஷ்பாவின் 2-வது கணவர் ராமசாமி புகார்
Recommended Video

டெல்லி: தம் மீது புகார் கொடுத்துள்ள 2-வது மனைவி சத்யபிரியா முதல் திருமணத்தை என்னிடம் மறைத்தார் என சசிகலா புஷ்பா எம்.பி.யை திருமணம் செய்திருக்கும் ராமசாமி புகார் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்.பி சசிகலா புஷ்பா, கணவர் லிங்கேஸ்வரனிடம் இருந்து விவகாரத்து பெற்றார். இதையடுத்து வழக்கறிஞர் ராமசாமியுடன் சசிகலா புஷ்பாவுக்கு திருமணம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து ராமசாமியின் மனைவி சத்யபிரியா, இத்திருமணத்துக்கு தடை கோரி குடும்ப நல நீதிமன்றத்தை நாடினார். ராமசாமி-சத்யபிரியா விவாகரத்து நிலுவையில் இருப்பதால் சசிகலா புஷ்பாவுடனான திருமணத்துக்கு தடை விதிக்கப்பட்டது.
ஆனால் இத்தடையை மீறி நேற்று டெல்லியில் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் ராமசாமி கொடுத்த புகாரின் பேரி சத்யபிரியா மீது டெல்லி போலீசார் தற்போது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சத்யபிரியா மீது 2014-ம் ஆண்டு டெல்லி போலீசார் ராமசாமி புகார் கொடுத்திருந்தார். அதில் முதல் மனைவியின் மகள் அஞ்சலியை சத்யபிரியா கொடுமைப் படுத்தினார். பழனிச்சாமி என்பவருடன் திருமணம் நடைபெற்றதை சத்யபிரியா மறைத்துவிட்டார் என ராமசாமி புகார் கொடுத்திருந்தார். இப்புகாரின் பேரில்தான் தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications