இந்தியாவில் கொரோனா.. மானேசர் முகாமில் 5 மாணவர்களுக்கு அறிகுறி.. மருத்துவமனையில் அனுமதி
டெல்லி: இந்தியாவில் கேரளாவில 3வது நபருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சூழலில், சீனாவின் வுகானில் இருந்து இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டு மானேசரில் வைக்கப்பட்டுள்ள மாணவர்களில் 5 பேருக்கு சளி, காய்ச்சல் என அறிகுறி இருப்பதால் அவர்கள் அனைவரும் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவின் வுகான் நகரில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அங்கு படித்துக்கொண்டிருந்த சுமார் 300 மாணவர்கள் பாதுகாப்பாக ஏர் இந்தியா விமானம் மூலம் கடந்த வாரம் இந்தியாவுக்கு அழைத்து வரப்பபட்டனர்.
அவர்கள் டெல்லி அருகே மானசேவரில் ராணுவம் உருவாக்கி உள்ள வைரஸ் தடுப்பு சோதனை மையத்தில் தங்க வைத்து பரிசோதிக்கப்படுகிறார்கள்

ராணுவ மருத்துவமனை
இதில் தற்போது ஐந்து மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகளான காய்ச்சல் மற்றும் சளி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 5 மாணவர்களும் உடனடினாக டெல்லி ராணுவ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னெச்சரிக்கை
இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், "மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஐந்து பேரில் ஒருவருக்கு கூட கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை., முன்னெச்சரிக்கையாக இந்த ஐந்து பேரும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளோம். ஐந்து பேரின் மாதிரிகள் எய்ம்ஸுக்கு பல்வேறு சோதனைகளுக்கு அனுப்பப்பட்டன. ஒரு நபரின் சோதனை முடிவை நாங்கள் பெற்றுள்ளோம், அது எதிர்மறையானது. அவருக்கு ஒன்றுமில்லை. மற்ற நான்கு முடிவுகளுக்காக காத்திருக்கிறோம் "என்று அவர்கள் கூறினர்.

3வது நபர்
இதற்கிடையே கேரளாவில், திங்களன்று மூன்றாவது நபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வுஹானில் இருந்து திரும்பிய 19 வயது மருத்துவ மாணவர், கேரளாவின் காசராகோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் சோதனை செய்ததில் அவருக்கு பாசிட்டிவ் இருப்பது தெரியவந்துள்ளது. சாதகமாக சோதனை செய்தார். முன்னதாக அந்த கேரளா மாணவர் வுஹானில் இருந்து கொல்கத்தாவுக்கு பறந்து வந்தார், அங்கிருந்து ஜனவரி 27 அன்று காசராகோடுக்கு ரயிலில் ஏறுவதற்கு முன்பு அவரை மற்றொரு விமானம் மூலம் கொச்சி அழைத்து வந்தனர். அவருக்குத்தான் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளா அறிவிப்பு
இதற்கிடையே கேரள அரசு இதை "மாநில பேரழிவு" என்று அறிவித்தது. இந்த நோய் பரவுவதைத் தடுக்க அரசாங்கம் அதிக நிதி ஒதுக்க உதவும், அதே நேரத்தில் நிலைமையை சமாளிக்க போலீசாருக்கு கூடுதல் அதிகாரங்கள் கிடைக்கவும் இந்த அறிவிப்பு உதவும். ஒரு சிறப்பு நடவடிக்கையில், இந்திய அரசாங்கம் வார இறுதியில் 600 க்கும் மேற்பட்டவர்களை, பெரும்பாலும் மாணவர்களை சீனாவின் வுகானில் இருந்து அழைத்து வந்தது. அவர்களை தீவிரமாக சோதித்து வருகிறது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications