இந்தியாவில் கொரோனா.. மானேசர் முகாமில் 5 மாணவர்களுக்கு அறிகுறி.. மருத்துவமனையில் அனுமதி
டெல்லி: இந்தியாவில் கேரளாவில 3வது நபருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சூழலில், சீனாவின் வுகானில் இருந்து இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டு மானேசரில் வைக்கப்பட்டுள்ள மாணவர்களில் 5 பேருக்கு சளி, காய்ச்சல் என அறிகுறி இருப்பதால் அவர்கள் அனைவரும் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவின் வுகான் நகரில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அங்கு படித்துக்கொண்டிருந்த சுமார் 300 மாணவர்கள் பாதுகாப்பாக ஏர் இந்தியா விமானம் மூலம் கடந்த வாரம் இந்தியாவுக்கு அழைத்து வரப்பபட்டனர்.
அவர்கள் டெல்லி அருகே மானசேவரில் ராணுவம் உருவாக்கி உள்ள வைரஸ் தடுப்பு சோதனை மையத்தில் தங்க வைத்து பரிசோதிக்கப்படுகிறார்கள்

ராணுவ மருத்துவமனை
இதில் தற்போது ஐந்து மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகளான காய்ச்சல் மற்றும் சளி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 5 மாணவர்களும் உடனடினாக டெல்லி ராணுவ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னெச்சரிக்கை
இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், "மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஐந்து பேரில் ஒருவருக்கு கூட கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை., முன்னெச்சரிக்கையாக இந்த ஐந்து பேரும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளோம். ஐந்து பேரின் மாதிரிகள் எய்ம்ஸுக்கு பல்வேறு சோதனைகளுக்கு அனுப்பப்பட்டன. ஒரு நபரின் சோதனை முடிவை நாங்கள் பெற்றுள்ளோம், அது எதிர்மறையானது. அவருக்கு ஒன்றுமில்லை. மற்ற நான்கு முடிவுகளுக்காக காத்திருக்கிறோம் "என்று அவர்கள் கூறினர்.

3வது நபர்
இதற்கிடையே கேரளாவில், திங்களன்று மூன்றாவது நபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வுஹானில் இருந்து திரும்பிய 19 வயது மருத்துவ மாணவர், கேரளாவின் காசராகோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் சோதனை செய்ததில் அவருக்கு பாசிட்டிவ் இருப்பது தெரியவந்துள்ளது. சாதகமாக சோதனை செய்தார். முன்னதாக அந்த கேரளா மாணவர் வுஹானில் இருந்து கொல்கத்தாவுக்கு பறந்து வந்தார், அங்கிருந்து ஜனவரி 27 அன்று காசராகோடுக்கு ரயிலில் ஏறுவதற்கு முன்பு அவரை மற்றொரு விமானம் மூலம் கொச்சி அழைத்து வந்தனர். அவருக்குத்தான் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளா அறிவிப்பு
இதற்கிடையே கேரள அரசு இதை "மாநில பேரழிவு" என்று அறிவித்தது. இந்த நோய் பரவுவதைத் தடுக்க அரசாங்கம் அதிக நிதி ஒதுக்க உதவும், அதே நேரத்தில் நிலைமையை சமாளிக்க போலீசாருக்கு கூடுதல் அதிகாரங்கள் கிடைக்கவும் இந்த அறிவிப்பு உதவும். ஒரு சிறப்பு நடவடிக்கையில், இந்திய அரசாங்கம் வார இறுதியில் 600 க்கும் மேற்பட்டவர்களை, பெரும்பாலும் மாணவர்களை சீனாவின் வுகானில் இருந்து அழைத்து வந்தது. அவர்களை தீவிரமாக சோதித்து வருகிறது.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications