கொரோனா.. காங் எம்எல்ஏவால் வந்த சிக்கல்.. தனிமைப்படுத்தப்படும் முதல்வர்.. குஜராத்தில் பெரும் பரபரப்பு
காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவருக்கு குஜராத்தில் கொரோனா வைரஸ் ஏற்பட்ட காரணத்தால் குஜராத்தில் முதல்வர் விஜய் ரூபாணி தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளார்.
காந்திநகர்: காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவருக்கு குஜராத்தில் கொரோனா வைரஸ் ஏற்பட்ட காரணத்தால் குஜராத்தில் முதல்வர் விஜய் ரூபாணி தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு இருக்கும் மாநிலங்களில் மிக மோசமான மாநிலம்தான் குஜராத். இங்கு கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இல்லை. ஆனால் இந்தியாவில் குஜராத்தில்தான் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது.
குஜராத்தில் மொத்தம் 650 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 59 பேர் குணப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். 563 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 29 பேர் பலியாகி உள்ளனர்.

எம்எல்ஏவிற்கு கொரோனா
இந்த நிலையில்தான் குஜராத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் எம்எல்ஏ இம்ரான் கேட்வாலா கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளார். கதியா - ஜமால்பூர் தொகுதியை சேர்ந்த எம்எல்ஏ ஆவார் இவர். இவருக்கு கடந்த செவ்வாய் கிழமை கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது . இவரை இப்போது அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

பாஜக முதல்வர்
இதனால் தற்போது அம்மாநில பாஜக முதல்வர் விஜய் ரூபாணி தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு இருக்கிறார். இந்தியாவில் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளும் முதல் முதல்வர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இனி இவர் அரசு மீட்டிங் எதிலும் கலந்து கொள்ள மாட்டார். அதிகாரிகளை சந்திக்க மாட்டார். போன் மூலம் மட்டுமே ஆலோசனைகளை செய்வார் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மீட்டிங் நடந்தது
இதற்கு காரணம் இருக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏ இம்ரான் கேட்வாலா கடந்த செவ்வாய் கிழமை குஜராத்தில் முதல்வர் நடத்திய மீட்டிங் ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். முதல்வருக்கு மிக அருகில் இவர் அப்போது அமர்ந்துள்ளார். அன்று மாலையே இவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இவர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பலருக்கு கை கொடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஷாக்கிங்
இதனால் தற்போது இந்த எம்எல்ஏக்கள் எல்லோரும் தங்களை தனிமைப்படுத்தும் முடிவில் இருக்கிறார்கள். அதேபோல் பாஜகவின் குஜராத் மாநில அமைச்சர்களான உள்துறை அமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோரையும் இவர் சந்தித்து உள்ளார். இதனால் அவர்களும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இந்த சம்பவம் குஜராத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications