Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காற்றில் வேகமாக பரவும்.. 2 மோசமான கொரோனா வகை இணைந்து உருவான புது "வேரியண்ட்".. வியட்நாமில் கலக்கம்!

Subscribe to Oneindia Tamil

ஹனோய்: வியட்நாமில் புதிய மோசமான உருமாறிய கொரோனா வைரஸ் உருவாகி இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்த புதிய வகை கொரோனா காற்றில் வேகமாக பரவும் திறன் கொண்டது என்று வியட்நாம் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Recommended Video

    Vietnam-ல் பரவும் கொடிய Corona New Strain | Oneindia Tamil

    கொரோனா வைரஸ் 2019 டிசம்பரில் உருவானதில் இருந்தே பல முறை உருமாற்றம் அடைந்துள்ளது. மியூட்டேஷன் என்று அழைக்கப்படும் இந்த மாற்றம், கொரோனா ஒருவரின் உடலில் இருந்து இன்னொருவரின் உடலுக்கு செல்லும் போது ஏற்படும் மாற்றம் ஆகும்.

    கொரோனாவின் ஸ்பைக் புரோட்டீன், அதன் ஆர்என்ஏ என்று ஒவ்வொரு விஷயமும் மியூட்டேஷனில் மாற்றம் அடைய வாய்ப்புள்ளது. அதாவது கொரோனா வைரஸ் அப்டேட் ஆவதே மியூட்டேட் என்று அழைக்கப்படும்.

    வேரியண்ட்

    வேரியண்ட்


    ஒவ்வொரு முறை கொரோனா வைரஸ் இப்படி மியூட்டேட் ஆகும் போதும் புதிய வேரியண்ட் உருவாகும். இதுவரை பல வேரியண்ட்கள் இப்படி உருவாகி உள்ளன. ஆனால் 10-20 வேரியண்ட்கள் மட்டும் மக்கள் இடையே அதிகமாக பரவி வருகிறது. B.1.222, B.1.619, D614G, B.1.1.7 என்று நிறைய வேரியண்ட்கள் இந்தியாவிலும், யுகேவிலும், அமெரிக்காவிலும் அதிகம் பரவியது.

    மோசம்

    மோசம்

    ஒவ்வொரு முறை கொரோனா மியூட்டேட் ஆகும் போதும் சமயங்களில் அது அதிக பலம் கொண்டதாக மாறும் அல்லது பலம் இழந்ததாக மாறும். இந்த நிலையில் வியட்நாமில் புதிய மோசமான உருமாறிய கொரோனா வைரஸ் உருவாகி இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இது இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வகை வைரஸ் மற்றும் யுகேவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வகை வைரஸின் கூட்டு என்று கூறப்பட்டுள்ளது.

    யுகே

    யுகே

    இந்தியாவில் கண்டறியப்பட்ட வகை b1.617 என்று அழைக்கப்படும். யுகேவில் கண்டறியப்பட்ட வகை b117 ஆகும். இந்த இரண்டும் ஒன்றாக சேர்ந்து உருவான புதிய வகை ஹைபிரிட் வேரியண்ட்தான் இந்த புதிய வியட்நாம் வகை கொரோனா என்று கூறப்படுகிறது. இந்த புதிய வகை கொரோனா காற்றில் வேகமாக பரவும் திறன் கொண்டது என்று வியட்நாம் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

     வியட்நாம்

    வியட்நாம்


    இது காற்றில் வேகமாக பரவுகிறது, ஆய்வக சோதனையில் இது அதிக ஆபத்து கொண்டதாக இருக்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டதாக வியட்நாம் அரசு தெரிவித்துள்ளது. கொரோனா முதல் அலையின் போது அதை எளிதாக வென்ற நாடுகளில் வியட்நாமும் ஒன்று. ஆனால் வியட்நாமில் இரண்டாம் அலை கொரோனா மிக மோசமாக பரவியது.

    ஏப்ரல்

    ஏப்ரல்

    கடந்த ஏப்ரலில் அங்கு இரண்டாம் அலை ஏற்பட்டது. இதற்கு இந்த புதிய வகை கொரோனாதான் காரணம் என்கிறார்கள். அங்கு கடந்த ஏப்ரலுக்கு பின் 3500க்கும் அதிகமான கேஸ்கள் வந்தது. 47 மரணங்கள் ஏற்பட்டது. இது முதல் அலையில் ஏற்பட்ட கேஸ்களை விட அதிகம் ஆகும். இதனால் அங்கு மக்கள் இடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+