கொரோனா மருத்துவமனையில் இருந்து தப்பித்து கோவாவுக்குள் வலம் வரும் மூதாட்டி- விசாரணைக்கு உத்தரவு
பனாஜி: மும்பையில் இருந்து கோவாவுக்கு வந்த பெண் முறையான கொரோனா பரிசோதனைகளில் இருந்து தப்பியது குறித்து விசாரணை நடத்த அம்மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் உத்தரவிட்டுள்ளார்.
நாட்டில் கொரோனா பாதிப்பு குறைவாக இருக்கும் மாநிலங்களில் கோவாவும் ஒன்று. கோவா சுற்றுலாத்தலமாக இருந்த போதும் கடும் கட்டுப்பாடுகள் காரண்மாக கொரோனா பாதிப்பு குறைவாக உள்ளது.

கோவாவில் மொத்தம் 166 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 57 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடுகளுக்கு திரும்பிவிட்டனர். தற்போது 109 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில்தான் மும்பையில் இருந்து கோவாவுக்கு வந்த மூதாட்டி ஒருவர் கொரோனா பரிசோதனைகளில் இருந்து தப்பி சென்றிருக்கிறார். தமக்கு மூச்சுவிடுவதில் சிரமம் இருப்பதாக மருத்துவமனைக்கு வந்திருக்கிறார் அந்த பெண். இதனையடுத்து அவர் கொரோனா மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு நடத்தப்பட்ட முதல் கட்ட பரிசோதனையில் கொரோனா பாசிட்டிவ் என தெரியவந்தது. இதற்கு அடுத்த கட்ட பரிசோதனை செய்வதற்குள் அந்த பெண் மருத்துவமனையில் இருந்து தப்பிவிட்டார். இது தொடர்பாக மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் கூறுகையில், மும்பையில் இருந்து வந்த பெண் கொரோனா பரிசோதனை மருத்துவமனையில் இருந்து தப்பியது உண்மைதான். இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications