உங்களுக்கு மனசாட்சியே இல்லையா... தூய்மை திட்டத்துக்காக ஆதரவற்ற முதியவர்களை வெளியேற்றிய அதிகாரிகள்!
இந்தூர்: மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் தூய்மை இந்தூர் திட்டத்திற்காக ஆதரவற்ற முதியவர்களை வலுக்கட்டாயமாக மாநகராட்சி ஊழியர்கள் வெளியேற்றினார்கள்.
மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூர் மாநகராட்சியின் வாகனத்தில் அழைத்து வரப்பட்ட 10-க்கும் மேற்பட்ட முதியவர்கள் வலுக்கட்டாயமாக உஜ்ஜைன் பகுதியில் உள்ள ஷிப்ரா ஆற்றக்கரையோரத்தில் மூட்டை, முடிச்சுகளுடன் இறக்கிவிடப்பட்டனர். கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் முதியவர்களை விட்டு சென்ற மாநகராட்சி ஊழியர்களிடம் ஆதரவற்ற முதியவர்களை ஏன் இங்கே விட்டு செல்கிறீர்கள்? என அப்பகுதி மக்கள் கேட்டனர். மேலும் இந்த காட்சிகளை படம் பிடித்த அவர்கள் மாநகராட்சி ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தூய்மையான இந்தூர் திட்டத்திற்காக மேலதிகாரிகள் உத்தரவின்பேரில் முதியவர்களை விட்டு செல்வதாக கூறி அவர்கள் சென்றனர். மிகவும் வயதான அந்த முதியவர்களால் தங்களுக்கு நடக்கும் கொடுமையை சொல்ல கூட முடியவில்லை.மனிதாபிமானமற்ற இந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவியது.
இதை அறிந்த மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், ''ஏழைகளுக்கு செய்யும் சேவை கடவுளுக்கு செய்யும் சேவைக்கு சமமானது. இந்த சம்பவத்தை சகித்துக் கொள்ள முடியவில்லை என ட்விட்டரில் கடும் கண்டனம் தெரிவித்தார். இதை பார்த்து கண்ணீர் வடித்த பலரும் இந்தூர் மாநகராட்சி அதிகாரிகளை திட்டி தீர்த்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக இந்தூர் மாநகராட்சி துணை ஆணையர் பிரதாப் சோலன்கி மற்றும் 2 ஊழியர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications