2ஜி அலைக்கற்றை மோசடியானதுதான்.. அருண் ஜெட்லி மீண்டும் திட்டவட்டம்!
Recommended Video

டெல்லி: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு மோசடியானதுதான் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு மோசடியானதுதான் என்பதற்கு, முறைகேடு குற்றச்சாட்டுகளுக்கு பிறகு நடைபெற்ற 2ஜி ஏலமே நல்ல உதாரணம். ஏனெனில் அதன்பிறகு நடைபெற்ற ஏலங்களின்போது அதிக விலைக்குதான் ஏலம் கொடுக்கப்பட்டது. ஆனால் 2ஜி அலைக்கற்றையோ அரசுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியது.

சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பை ஏதோ, தங்கள் நேர்மைக்கு கிடைத்த பேட்ஜ் என்பதை போல காங்கிரஸ் தலைவர்கள் கருதி கருத்து கூறி வருகிறார்கள். உச்சநீதிமன்றம், 2ஜி அலைக்கற்றை நேர்மையாக நடக்கவில்லை என 2012லேயே கூறியுள்ளது.
சிபிஐ சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை பரிசீலனை செய்து, விசாரணை அமைப்புகள் தேவைப்படும் நடவடிக்கையை எடுப்பார்கள். இவ்வாறு அருண் ஜெட்லி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications