வலுவான எதிர்க்கட்சி கூட்டணியை சமாளிக்க முடியாத பாஜக.. உ.பி இடைத்தேர்தலில் படுதோல்வி
உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள கோராக்பூர், பஹல்பூர் ஆகிய லோக்சபா தொகுதிகளுக்கான இடைத்தேர்தலின் வாக்கு எண்ணும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
லக்னோ: வலுவான எதிர்க்கட்சி கூட்டணியை சமாளிக்க முடியாத பாஜக உத்தர பிரதேச இடைத்தேர்தலில் படுதோல்வி அடைந்து இருக்கிறது.
உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள கோராக்பூர், பஹல்பூர் ஆகிய லோக்சபா தொகுதிகளுக்கான இடைத்தேர்தலின் வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. இதில் பாஜக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.
பாஜகவின் இந்தத் தோல்விக்கு பின் எதிர்க்கட்சிகளின் கூட்டணி முக்கியமாக உள்ளது. இந்தக் கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலிலும் தொடர்ந்தால் பாஜக பெரும் சிக்கலையே சந்திக்க நேரிடும்.

பெரிய கூட்டணி
உ.பி. இடைத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் தனித்து போட்டியிட்டது. சமாஜ்வாதி கட்சிக்கு பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு அளித்தது. இதனால் தேர்தல் மும்முனை போட்டியானது. அங்கு காங்கிரஸ் கட்சி இப்போது படு வீக்காக இருப்பதால் இந்த இடைத் தேர்தல் பாஜக - சமாஜ்வாதி கூட்டணி இடையிலான போட்டியாகவே இருந்தது.

பார்முலா
பாஜக கடந்த தேர்தல்களில் என்ன பார்முலாவை பயன்படுத்தி வந்ததோ அது மொத்தமாக முடிவுக்கு வந்து இருக்கிறது. எதிர்க்கட்சிகள் ஒன்றாக கூடினால் பாஜகவை எளிதாக வெல்ல முடியும் என்று இந்த தேர்தல் வெற்றி காட்டி இருக்கிறது.

எதிர்க்கட்சிகள் பாடம்
எதிர்க்கட்சிகள் தனியாக நின்றதால் இவ்வளவு நாட்களை ஓட்டுகள் பிரிந்து வந்தது. இதை வைத்துதான் பாஜக எப்போதும் வெற்றி பெற்றது. ஆனால் கடந்த கால தேர்தல் தோல்விகளில் இருந்து இப்போது எதிர்க்கட்சிகள் பாடம் கற்றுக் கொண்டு இருக்கிறது. அது இந்த தேர்தலில் பிரதிபலித்துள்ளது.

அடுத்த வருடம்
இந்த தேர்தல் வெற்றி காரணமாக இந்த கூட்டணி வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் தொடர வாய்ப்பு உள்ளது. இந்த கூட்டணி வாக்குகளை கவர்ந்தது எதிர்கால கூட்டணிக்கு வழிவகை செய்து இருக்கிறது.












Click it and Unblock the Notifications