தேர்தல் தேதி வெளியானதுமே வேட்பாளர்களை அறிவித்த மார்க்சிஸ்ட்! கேரளாவில் 56 சிட்டிங் MLAக்களுக்கு சீட்
திருவனந்தபுரம்: 140 தொகுதிகள் உள்ள கேரளாவில் 81 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இன்று அறிவித்தது ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. 7 இடங்களில் அக்கட்சியின் ஆதரவு பெற்ற சுயேட்சைகள் போட்டியிடும் நிலையில், மீதமுள்ள தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
140 தொகுதிகளை கொண்ட கேரள சட்டசபைக்கு அடுத்த மாதம் 9 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. கேரள சட்டசபை தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. கேரளாவில் இடதுசாரிகளான இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் இடது ஜனநாயக முன்னணி என்ற பெயரில் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுகின்றன. மாநில முதலமைச்சராக பினராயி விஜயன் செயல்பட்டு வருகிறார்.

கேரள சட்டசபையில் மொத்தம் 140 தொகுதிகள் உள்ளன. இங்கு ஆட்சியைப் பிடிக்க, ஒரு கட்சி அல்லது கூட்டணி 71 இடங்களில் வெற்றி பெற வேண்டும். முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க எல்.டி.எஃப் முயற்சிக்கிறது.
இந்நிலையில், கேரள சட்டசபை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, 86 இடங்களில் போட்டியிடுகிறது. 81 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இன்று அறிவித்துள்ளது சிபிஐஎம். 7 இடங்களில் அக்கட்சியின் ஆதரவு பெற்ற சுயேட்சைகள் போட்டியிடும் நிலையில், மீதமுள்ள தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் மீண்டும் போட்டியிட உள்ளார். முதலமைச்சர் பினராயி விஜயன் மீண்டும் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள தர்மடம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். முன்னாள் சுகாதார அமைச்சர் கே.கே. ஷைலஜா, கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பேராவூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். தற்போது எம்.எல்.ஏ.வாக இருக்கும் 56 பேருக்கு வரும் தேர்தலில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் 11 பேர் தற்போதைய அமைச்சர்கள் ஆவர்.
முன்னதாக, இடது ஜனநாயக முன்னணியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கனவே 25 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கேரளாவில் சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 16 ஆம் தேதியான நாளை தொடங்குகிறது.
கேரளாவில் கடந்த 2021 சட்டசபை தேர்தலில் இடதுசாரி ஜனநாயக முன்னணி 99 இடங்களில் வெற்றி பெற்றது. சிபிஐஎம் 62 இடங்களையும், சிபிஐ 17 இடங்களையும், ஐயுஎம்எல் 15 இடங்களையும், கேரளா காங்கிரஸ் 5 இடங்களையும், ஜேடி 2, என்சிபி கட்சி இரண்டு இடங்களையும் வென்றது.
மேலும், ஐக்கிய ஜனநாயக முன்னணி 41 இடங்களை கைப்பற்றியது. காங்கிரஸ் 21 இடங்களிலும், ஐயுஎம்எல் 15 இடங்களிலும், கேளரா காங்கிரஸ் 2 இடங்களிலும், புரட்சிகர சோசலிசக் கட்சி 1, கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது. என்டிஏ கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications