மொழிகளுக்கிடையேயான சமத்துவத்துக்கு எதிரானது - மார்க்சிஸ்ட் கடும் எதிர்ப்பு!!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மத்திய அரசின் இந்தி திணிப்பு முயற்சியானது மொழிகளுக்கிடையேயான சமத்துவத்திற்கு எதிரானது என்று மார்க்சிஸ்ட் கட்சியும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு வெளியிட்டுள்ள அறிக்கை:
மோடி அரசாங்கம், சமூக வலைத்தளங்களில் அரசின் தகவல் தொடர்பு மொழியாக இந்தியை பயன்படுத்த முடிவு செய்துள்ளது, இது மொழிகளுக்கிடையேயான சமத்துவத்திற்கு எதிரானது ஆகும்,
பிற தேசிய மொழிகளுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதியாகும். இந்தியோடு அனைத்து தேசிய மொழிகளும், ஆங்கிலமும் சமூக வலைத் தள தகவல் தொடர்புக்கு பயன்படுத்தப்படும் வகையில், அரசு தனது கொள்கையை மாற்றி அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications