அரசியல் ஆட்டத்தில் அசத்துவாரா ஸ்ரீசாந்த்.. மீண்டும் தீவிர அரசியலில் களமிறங்குகிறார்!
முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
திருவனந்தபுரம்: கேரளாவைச் சேர்ந்தவரும், முன்னாள் வேகப் பந்துவீச்சாளரும், கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி வாழ்நாள் தடை விதிக்கப்பட்டவரும், கோர்ட்டால் நிரபராதி என விடுவிக்கப்பட்டவருமான ஸ்ரீசாந்த் மீண்டும் தீவிர அரசியலில் இறங்குகிறார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற கேரள சட்டசபைத் தேர்தலில் திருவனந்தபுரம் தொகுதியில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்துக்கு வாய்ப்பு வழங்கியது பாஜக. ஆனால் அவர் வெற்றி பெறவில்லை. அந்தத் தொகுதியில் வி.எஸ். சிவகுமார் என்பவர் வெற்றி பெற்றார்.

ஸ்ரீசாந்துக்கு மூன்றாம் இடமே கிடைத்தது. இதையடுத்து அரசியலை விட்டு சிறிது காலம் ஒதுங்கி இருந்த ஸ்ரீசாந்த் மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளார் ஸ்ரீசாந்த்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், எனது வாழ்வில் அரசியலே முதன்மையானது என்றும் இளைஞர்கள் அரசியலில் ஈடுபட பெரும் வாய்ப்பை பாஜக வழங்கியுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் எனது பங்கிற்கு அதிக அளவில் இளைஞர்களை பாஜகவில் சேர முயற்சி செய்வேன் என்றும் தெரிவித்தார்.
2013 ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாக ஸ்ரீசாந்த், அங்கித் சவாண், அஜித் சண்டிலா ஆகியோர் கைது செய்யப்பட்டார்கள். ஸ்ரீசாந்த், சவாண் ஆகியோருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வந்த தில்லி நீதிமன்றம், குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லை என்று இவர்கள் 3 பேர் உள்பட 36 பேரை விடுவித்தது. ஆனால், ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்ட வீரர்களின் (ஸ்ரீசாந்த், அங்கித் சவாண் உள்ளிட்டோர்) ஆயுள்காலத் தடை தொடரும் என்று பிசிசிஐ அறிவித்தது.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications