"கிரிமினல்களுக்கு நாடாளுமன்றத்தில் இடமில்லை, சிறைக்கு போங்கள்"- எம்.பிக்களுக்கு மோடி எச்சரிக்கை
டெல்லி: கிரிமினல்களுக்கு நாடாளுமன்றத்தில் இடமில்லை, சிறைச்சாலையில்தான் உள்ளது என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.
ராஜ்யசபாவில் நேற்று அவர் பேசுகையில், "கிரிமினல் பின்புலம் உள்ளவர்கள்தான் தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்றம் செல்ல முடிகிறது என்ற பேச்சுக்கள் நாடு முழுவதும் கேட்கின்றன. மக்கள் பிரதிநிதிகள் மீது மக்கள் மனதில் பதிந்துள்ள பிம்பம் இப்படித்தான் உள்ளது. எனவே குற்றப்பின்னணி உள்ளவர்கள் சிறைக்குத்தான் செல்ல வேண்டுமே தவிர நாடாளுமன்றத்துக்கு வரக்கூடாது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் சுத்தப்படுத்துவது நமது கடமையாகும்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான கிரிமினல் வழக்குகளை ஒராண்டுக்குள் விசாரித்து முடித்து அவர்களை பற்றிய முழுமையாக பிம்பத்தை வெளிக்கொண்டுவர உச்சநீதிமன்றம் நடவடிக்கை எடுக்கலாம். தவறு செய்தவர்கள் என்று நிரூபிக்கப்பட்டால் அவர்கள் ஜெயிலுக்கு போகட்டும். தவறு செய்யவில்லை என்று நிரூபணமானால் அவர்கள் கவுரவத்துடன் சமூகத்தின் முன்பு தலை நிமிர்ந்து நிற்கட்டும்". இவ்வாறு மோடி பேசியபோது ராஜ்யசபா உறுப்பினர்கள் மேஜையை தட்டி வரவேற்பை தெரிவித்தனர்.
நடப்பு நாடாளுமன்றத்தில் மொத்தம் 186 மக்களவை எம்.பிக்கள் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள் உள்ளன. இது மொத்த உறுப்பினர்களில் 34 சதவீதமாகும். இதில் மிக தீவிர குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் 21 சதவீதமாகும். கொலை குற்றச்சாட்டுக்கு உள்ளான 9 எம்.பிக்களில் 4பேர், பாஜகவை சேர்ந்தவர்கள். கொலை முயற்சி வழக்கில் சிக்கியுள்ள, 17 எம்.பிக்களில் 10 பேர் பாஜகவை சேர்ந்தவர்களாகும். கடந்த நாடாளுமன்றத்தில் கிரிமினல் குற்றச்சாட்டுக்கு உள்ளான எம்.பிக்கள் 158 பேர் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications