பெங்களூரில் வெறியாட்டம் போட்ட போராட்டக்காரர்கள்: மத்தியப் பாதுகாப்புப் படையினர் குவிப்பு !

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: காவிரி பிரச்சனை தொடர்பாக பெங்களூரில் மிகப் பெரிய வெறியாட்டத்தைப் போட்டு முடித்துள்ளன கன்னட போராட்டக்காரர்கள். இதனால் வெடித்துள்ள கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர சிபிஆர்எப், ஆர்பிஎப் உள்ளிட்ட மத்தியப் படைகள் களமிறக்கப்பட்டுள்ளன.

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்படாதால் உச்ச நீதிமன்றம் தலையிட்டு தமிழகத்திற்கு தண்ணீர் தர வேண்டும் என்று கர்நாடக அரசிற்கு உத்தரவிட்டது. இதனையடுத்து கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிரான போராட்டம் தலை தூக்கியது. தமிழர்கள் கடைகள், வீடுகள், வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. தீ வைத்து கொளுத்தப்பட்டன. இன்று நடந்தது வரலாறு காணாத வெறியாட்டம் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

CRPF deployed in Bengaluru

இந்நிலையில், பெங்களூருவில் 144 தடை உத்தரவை அம்மாநில அரசு அமல் படுத்தியுள்ளது. மேலும் 15 ஆயிரம் போலீசார் பெங்களூரில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பெங்களூரில் வெடித்துள்ள கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர இவை போதாது என்பதால் கூடுதலாக, சிஆர்பிஎப், ஆர்பிஎப், மத்திய தொழிலக படை ஆகியவை பெங்களூருவில் நடக்கும் கலவரத்தைக் கட்டுப்படுத்த களம் இறக்கப்பட்டுள்ளன. மேலும், 20 ஆயிரம் ஊர்க்காவல் படையினர், 185 கர்நாடக அதிரடிப் படையினரும் முக்கிய இடங்களில் குவிக்கப்பட்டுள்ளனர் என்று கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஷ்வர் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+