மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் கரையை கடந்தது 'புல் புல்’ புயல்.. மேற்கு வங்கத்தில் பேய் மழை!
கொல்கத்தா: 'புல் புல்' புயல் இன்று அதிகாலை 2.30 மணியளவில் மேற்கு வங்கத்தின் கடலோர பகுதி மற்றும் வங்காளதேச நாட்டை ஒட்டிய பகுதியில் கரையை கடந்தது. இந்த புயல் காரணமாக மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசத்தில் மிக அதி கனமழை பெய்தது.
வங்கக்கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. பின்னர் புயலாக உருவெடுத்து மேற்கு திசை நோக்கி நகர்ந்தது. இந்த புயலுக்கு பாகிஸ்தான் அளித்த புல்புல் என்ற பெயர் சூட்டப்பட்டது.
இந்த புயல் இன்று அதிகாலை 2.30 மணிக்கு கடலோர மேற்கு வங்காளம் மற்றும் வங்கதேச நாட்டை ஒட்டி கரையைக் கடந்தது. புயல் கரையை கடந்த போது 100 முதல் 120 கிலோமீட்டருக்கு காற்று வீசியதுடன் கனமழையும் பெய்தது.

வடகிழக்கு மாநிங்கள்
ஒடிசா, மேற்கு வங்கம், வங்காளம், மிசோரம், மேகலயா, திரிபுரா மற்றும் மிசோரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக வங்கதேசத்தின் டாக்காவிலும், மேற்கு வங்கத்தின் கொல்கத்தா அதன் சுற்றுவட்டாரங்களில் கனமழை பெய்தது.

19லட்சம் பேர்
புயல் குறித்து முன்னெச்சரிக்கை அறிவிப்பு காரமணாக மேற்கு வங்கத்தில் கடலோர மாவட்டங்களில் மக்களை மீட்டு பாதுகாப்பாக தங்கவைப்பதற்காக 5500 முகாம்கள் அமைக்கப்பட்டு இருந்தது. சுமார் 19 லட்சம் மக்கள் புயல் வரும் முன் அங்கு தங்க வைக்கப்பட்டனர்.

இயல்பு வாழ்க்கை
மேற்கு வங்கத்தின் கடலோர மாவட்டங்களில் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. அவற்றின் அகற்றும் பணி நடந்து வருகிறது. புயலால் சேதமடைந்த பகுதிகளில் நிவாரண பணிகளை பேரிடர் மீட்பு படையினர் மேற்கொண்டு வருகிறார்கள். புல்புல் புயல் காரணமாக மேற்கு வங்கத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை
மேற்கு வங்கத்தின் கொல்கத்தா மற்றும் வடக்கு24 பிரக்னா உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை காரணமாக 4 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒடிசாவில் புல்புல் புயல் காரணமாக கெந்த்ராபாராவில் 2 பேர் வெவ்வேறு நிகழ்வில் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே கடல்கொந்தளிப்பாக இருப்பதால் ஒடிசா முதல் மேற்குவங்கம் வரையிலான பகுதியில் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications